நிகாத் ஜரீன்: உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை

குத்துச்சண்டை மகளிர் உலக சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
    • இலங்கையில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார்.
    • இலங்கையில் 2வது முறை ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்ததும் மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெறாததே இன்றைய நிலைக்கு காரணம் என்று அவரது சகோதரரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, வரும் மாதங்களில் உலகளாவிய உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.
    • திருநெல்வேலி கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உரிமையாளரின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • ராம்ஜெத்மாலானியின் வாதங்கள்தான், எங்கள் விடுதலைக்கு வழிகாட்டியது; முதன்மைக் காரணம் ஆயிற்று என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
    • பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பும் ஜிஎஸ்டி குறித்த தீர்ப்பும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உள்ளன. ஏற்கெனவே உள்ள உரிமைகளை உறுதிபடுத்தியுள்ளது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.
  2. "பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெட்கக்கேடானது'' - காங்கிரஸ்

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, நிகாத் ஜரீன்: மகளிர் உலக குத்துச்சண்டை 52 கிலோ எடைப்பிரிவில் சாதனை படைத்த தெலங்கானா மகள்

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

    துருக்கயின் இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் போட்டியில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை அவர் தோற்கடித்தார்.

    இஸ்தான்புல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 12வது பதிப்பில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

    எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, 52 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், 30-27, 29-28, 29-28, 30-27, 29-28 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை வீழ்த்தினார்ந நிகாத் ஜரீன்.

    முன்னதாக, புதன்கிழமை அவர் பிரேஸிலின் கரோலினா டி அல்மேடாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதைத்தொடர்ந்து தங்கம் வென்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்ற ஐந்தாவது இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இவருக்கு முன்பு, மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி ஆர்.எல் மற்றும் லேகா கே.சி ஆகியோர் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. ஆப்கன் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்களுக்கு கட்டுப்பாடு: தாலிபன்கள்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் மற்றும் திரையில் தோன்றும் பெண்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பும்போது தங்களுடைய முகத்தை மறைக்குமாறு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் பிபிசி பாஷ்தோ சேவையிடம் கூறினார்.

    ஆப்கானிஸ்தானில் அனைத்து பெண்களும் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடையை அணிய வேண்டும் அல்லது தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆணையை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களுக்கு ஆண் பாதுகாவலர் இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், காபூலில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் ஒரு பெண் ஆப்கானிஸ்தான் செய்தியாளர் சமீபத்திய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.

    தமது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத அவர், "தொலைக்காட்சியில் நாங்கள் தோன்றிப் பேசுவதை நிறுத்த அவர்கள் (தாலிபன்கள்) எங்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கிறார்கள்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  5. மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு பாமக ஆதரவு

    மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

    திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதி முடிவடைகிறது.

    இந்த இடங்களை நிரப்புவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் காலஅட்டவணையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, தேர்தல் அறிவிக்கை மே 24ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ஆம் தேதி. வேட்புமனுக்கள் பரிசீலனை ஜுன் 1ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாள் ஜுன் 3-ம் தேதியாகும்.

    தமிழக சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும்கிடைக்கும். திமுக, தனக்கான 4 இடங்களில் 3-ல் போட்டியிடுகிறது. ஏற்கெனவே சட்டப்பேரவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஓர் இடத்தை காங்கிரஸுக்கு வழங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, 3 இடங்களுக்கான திமுக வேட்பாளராக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்’ என திமுக தலைமை சமீபத்தில் அறிவித்திருந்தது.

  6. நீலகிரி குன்னூரில் மு.க. ஸ்டாலின்

    ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களை சந்திப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    குன்னூரில் திமுக தொண்டர்கள் இடையே பேசிய மு.க. ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உங்களை முதல் முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன், உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும் நான் கட்டுப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. தமிழ்நாடு கல் குவாரிகள்: கண்காணிக்கத் தவறுகிறதா அரசு, விதிமீறல்கள் நடப்பது உண்மையா?

  8. இலங்கை: மஹிந்த ராஜபக்ஷதான் இன்றைய நிலைக்கு காரணம் - சமல் ராஜபக்ஷ

    ராஜபக்ஷ சகோதரர்கள்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ராஜபக்ஷ சகோதரர்கள்

    இலங்கையில் அதிகாரம், பதவிகள் மீது பேராசை கொண்டால் தற்போது காணும் விளைவுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் 'மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால்தான், தற்போதைய நிலைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது' என்று, அவரின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

    மேலும், 'அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகள் மீது பேராசை கொண்டால், தற்போது காணும் விளைவுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழிகளில்லை.' என்றும் சமல் ராஜபக்ஷ கூறினார்.

    அவர் இவ்வாறு பேசும் போது, சபையில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கவில்லை.

  9. ராம்ஜேட்மலானியின் வாதங்களே விடுதலைக்கு வழிகாட்டியது - பேரறிவாளன்

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம் அம்மாளும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர்.

    இது குறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க வைகோ காரணமாக இருந்தார். அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றே இங்கே வர நினைத்தோம். ஆனால், நேரம் ஆகி விட்டது.

    இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர் ராம்ஜேட்மலானியை வைகோ அழைத்து வந்து வாதாடச் செய்தார். அவர், சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்க்கின்ற வழக்கம் இல்லை. ஆனால், வேலூர் சிறைக்கு வந்து எங்களைப் பார்த்தார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்கு தண்டனைக்குத் தடை ஆணை பெற்றுக் கொடுத்தார். உச்சநீதிமன்றத்தின் அத்தனை அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார். அவருடைய வாதங்கள்தான், எங்கள் விடுதலைக்கு வழிகாட்டியது.

    ராம்ஜேட்மலானி தற்போது உயிரோடு இல்லை. ஆனால், அவர் செய்த உதவியை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது.'' என்று பேரறிவாளன் கூறியதாக மதிமுக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வைகோவைச் சந்தித்த பேரறிவாளன்

    பட மூலாதாரம், VAIKO

    படக்குறிப்பு, வைகோவைச் சந்தித்த பேரறிவாளன்
  10. இலங்கை யுத்த கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனை - சிங்கள மக்களும் வலியுறுத்தல்

    இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதி தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர்.

    கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதல்முறையாக சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

    யுத்த கால கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

    வடக்கில் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய துப்பாக்கியை தென் பகுதி மக்களை நோக்கி ராஜபக்ஷ குடும்பம் திருப்பியுள்ளது என்கிறார்கள். இது குறித்த் இந்த காணொளியில் பார்க்கலாம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"

  12. பேரறிவாளன் விடுதலை: தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் விலகல்

    பேரறிவாளன் விடுதலையை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொண்டாடுவதை கண்டித்து தாம் வகித்து வரும் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் கோவி. சிற்றரசு.

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைது செய்யப்பட்ட பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதை வரவேற்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இந்நிலையில், ''திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும். திமுக கூட்டணி கட்சியினரின் செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக'' கூறி காங்கிரஸ் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    தன்னைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது ராஜினாமா செய்திருப்பதாக செய்தியாளர்களிடம் சிற்றரசு தெரிவித்தார்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் பதவி விலகல்

    பட மூலாதாரம், Govi.Sitrarasu

  13. நெல்லை கல்குவாரி விபத்து - கனிம வளத்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

    கல்குவாரி விபத்து

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் பாறை சரிந்து 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மூன்று பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். ஒருவரை மீட்கும் பணி தொடர்கிறது.

    இது தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், விபத்து ஏற்பட்ட கல்குவாரி அலுவலகத்தில், நீதிமன்றம் உத்தரவுப்படி நாங்குநேரி ஏ.எஸ்.பி ரஜத் சதூர்வேதி தலைமையில் போலீசார் ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவையும் கதவில் ஒட்டினர்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில், ''கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ். அவரது மகன் குமார் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனைக்கு பிறகு சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்

  14. பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரிக்கலாம்: அமெரிக்க உயரதிகாரி

  15. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி

  16. மாநில உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது - தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    பட மூலாதாரம், Dr P ThiagaRajan

    படக்குறிப்பு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பும் ஜிஎஸ்டி குறித்த தீர்ப்பும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உள்ளன. ஏற்கெனவே உள்ள உரிமைகளை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது அரசியல்சாசன அசாதாரணம் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். ஜிஎஸ்டி கவுன்சிலால் பரிந்துரைக்க மட்டுமே முடியும். அதை செயல்படுத்த அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தியுள்ளது.

    மாநில அரசுகளின் உரிமைகளை மீறி முடிவு எடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் பிடிக்கவில்லை என்றாலும் அதை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.' என்றார்.

    மேலும், 'பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பும் ஜிஎஸ்டி குறித்த தீர்ப்பும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. இரு தீர்ப்புகளையும் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே உள்ள உரிமைகளை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

    அமைச்சரவை உரிமை, ஆளுநர் உரிமை குறித்து உச்சநீதிமன்றம் நேற்று தெளிவாக தீர்ப்பளித்தது. தொடர்ந்து இரு அடுத்தடுத்த தீர்ப்புகளும் மாநில உரிமையை நிலைநாட்டியுள்ளன.' என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

  17. பேரறிவாளன் விடுதலை: கே.எஸ்.அழகிரியின் விமர்சனத்திற்கு திமுக பதில்

    டி.கே.எஸ்.இளங்கோவன்

    பட மூலாதாரம், TWITTER

    படக்குறிப்பு, டி.கே.எஸ்.இளங்கோவன்

    பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியின் விமர்சனம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் பதி அளித்துள்ளார்.

    திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்தார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் எல்லாம் அப்போதே கொல்லப்பட்டுவிட்டனர். இந்த வழக்கில் தெரியாமல் சிக்கிக் கொண்டவர்களும் உள்ளனர்.

    ஆயுள் தண்டனை சிறைவாசிகள் எல்லாம் பொதுவாக 14 ஆண்டுகளில் விடுதலையாகின்றனர். எந்தக் குற்றமாக இருந்தாலும் இது பொருந்தும்.அதேநேரம், இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டுமே தவிர, இது ராஜீவ்காந்தியை கொன்றதற்கான பரிசு கிடையாது'' என்கிறார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், '' ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அவர்கள் யாரும் தண்டனையை அனுபவிக்காமல் இல்லை. தங்கள் தலைவரின் மரணம் தொடர்பான கோபம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அந்த மனநிலையில் அவர்கள் பேசுகின்றனர்.

    எங்களைப் பொறுத்தவரையில் தண்டனை காலத்துக்கும் மேல்அவர்கள் சிறையில் உள்ளனர் என்ற ஒற்றைக் காரணத்தை வைத்துப் பேசுகிறோம். அவர்களை தண்டனையில் இருந்து தி.மு.க காப்பாற்றவில்லை.

    எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை கொடுப்பதற்குக் காரணம், அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்பதுதான். அவர்கள் சிறையிலேயே மடிந்து போக வேண்டும்என்பது சரியானதல்ல. அவர்கள் திருந்தி வாழ்வதையும் பார்க்க வேண்டும்'' என்கிறார்.

  18. தன்னை 'க்ருஷா' கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு ரணில் பேசியது என்ன? சுவாரசிய கதை

  19. தமிழன் கொலைக்குற்றத்துக்கு உள்ளானால் விடுதலை செய்துவிடலாமா? - கே.எஸ்.அழகிரி கேள்வி

    "ஒரு தமிழன் கொலைக் குற்றத்துக்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிடலாம் என்பது நியதியா? இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இன்னைக்கு நீதி செங்கோல் கீழே சாய்ந்திருக்கிறது," என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெள்ளை துணியால் வாயைக்கட்டி காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

    சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழதிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மன வருத்தம் அளிப்பதாகவும், இதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, "இந்நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. ஆனால் இதன் விளைவாக, ஒரு கட்டுப்பாடற்ற எல்லா சட்டம் ஒழுங்கையும் தூக்கி எறியும் மோசமான, சமூக சூழல் உருவாகும் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு சிறையில் சுமார் 600, 700 கைதிகள் 25 ஆண்டு காலமாக, கொலை, திருட்டு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஏன் சொல்லவில்லை.? அவர்கள் தமிழர்கள் இல்லையா? ராஜீவ்காந்தியை கொலை செய்தால் மட்டும் தான் தமிழரா? இது என்ன நியாயம்?," என கே.எஸ்.அழகிரி‌ கூறினார்.

    கே.எஸ்.அழகிரி
    படக்குறிப்பு, கே.எஸ்.அழகிரி
  20. சுற்றுச் சூழல் மாசுபாட்டால் ஓரு ஆண்டில் 23 லட்சம் பேர் இறப்பு - என்ன சொல்கிறது ஆய்வு அறிக்கை ?

    இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 23 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    இதில், 16 லட்சம் இறப்புகள், காற்று மாசுபாட்டாலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நீர் மாசுபாட்டாலும் நிகழ்ந்தவை என்கிறது லான்செட் அறிக்கை.

    உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் இறந்ததாக தெரிவிக்கும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

    காற்று மாசு

    பட மூலாதாரம், Getty Images