இலங்கை வன்முறை: முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு

இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. நெல்லை கல்குவாரி விபத்து: மூன்றாவது நாளாக மீட்புப் பணி

    நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்புப் பணி
    படக்குறிப்பு, நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்புப் பணி

    திருநெல்வேலியில் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது.

    திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் ராட்சத கல் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதில், முருகன், விஜய் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட செல்வம், என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமையன்று நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர் முயற்சிக்கு பின்னர், லாரியின் அருகில் இடிபாடுகளில் சிக்கி கிடந்தவரை, இரவு 11 மணியளவில், சுமார் 47 மணி நேரத்திற்கு பின் சடலமாக கண்டெடுத்தனர்.

    இந்நிலையில், கல்குவாரி இடிபாடுகளில் சிக்கியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன் ஆகிய இருவரின் உடலை மீட்கும் பணி , இன்று 3வது நாளாக தொடர்கிறது.

  2. இந்திய பொருளாதாரம் குறித்து அண்மையில் ப.சிதம்பரம் சொன்னது என்ன?

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் 'சிந்தன் ஷிவிர்' மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டின் பொருளாதார நிலைமை, குறித்து கடந்த சனிக்கிழமை பேசினார்.

    அப்போது, இந்தியாவின் பொருளாதார நிலை "தீவிர கவலைக்குரிய இடத்தில் உள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரக் கொள்கைகளை மறுசீரமைப்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்'' என்றார்.

    மேலும், ''மாநிலங்களின் நிதி நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவீனமாக உள்ளது. அவற்றை சரிப்படுத்த உடனடி திருத்த நடவடிக்கைகள் தேவை.'' என்றும் குறிப்பிட்டு, மத்திய அரசை விமர்சித்து பேசியிருந்தார்.

    ப.சிதம்பரம், அவரது மகன் வீடுகளில் சிபிஐ இன்று சோதனை நடத்துகிறது. கடந்த சனிக்கிழமை அவர் பேசியதன் முக்கிய அம்சங்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

    ப.சிதம்பரம்
  3. இலங்கை பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

    இலங்கை சபாநாயகர்

    இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை ஆளுந்தரப்பு பிரேரித்திருந்தது.

    இலங்கையில் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது.

    இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியினர் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரித்திருந்தது.

    பிரதி சபாநாயகராக பெண் ஒருவரை தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரின் விருப்புக்கு மாறாக பொதுஜன பெரமுன கட்சியினர் ஆண் ஒருவரை அந்தப் பதவிக்கு தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    ரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளும், ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளும் பெற்றனர்.

  4. "ரூபாயின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும்" – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில்

  5. எப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லாமலேயே சிபிஐ சோதனை - ப.சிதம்பரம்

    ப.சிதம்பரம்

    பட மூலாதாரம், P Chidambaram

    படக்குறிப்பு, ப.சிதம்பரம்

    முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இல்லை. ஆனாலும் எனது சென்னை வீட்டிலும், டெல்லியில் உள்ள அலுவல்பூர்வ குடியிருப்பிலும் சிபிஐ சோதனை நடைபெறுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் மத்தியப் புலனாய்வு துறை (சிபிஐ) இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

    இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சோதனையில் எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை. பறிமுதல் செய்யவும் இல்லை.'' என்றும் 'இந்த சோதனை சுவாரஸ்யமானதாக இருக்கிறது.' என்றும் தெரிவித்துள்ளார்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. மே 18-இல் தாக்குதலுக்குத் திட்டமா? முள்ளிவாய்க்காலில் நடப்பது என்ன? - கள நிலவரம்

  7. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இது வரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.

  8. அரசு தொகுப்பு வீடு தளம் இடிந்து விழுந்து விபத்து: கணவன் - மனைவி மருத்துவமனையில் அனுமதி

    அரசு தொகுப்பு வீடு தளம் இடிந்து விழுந்து விபத்து

    மதுராந்தகம் அருகே அரசு தொகுப்பு வீடு தளம் இடிந்து விழுந்ததில், கணவன் - மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இந்தலூர் பெரியார் நகரில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசால் கிராமத்திற்கு குடிசை மாற்று வாரியத்தால் 21 தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன.

    அந்த வீட்டில் வசித்து வருபவர் முருகேசன் (60), இவரது மனைவி அஞ்சலை (52). இவர்கள் இருவரும் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

    மழையின் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்தனர்.

    இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ளதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  9. இலங்கை நெருக்கடி, போராட்டம், சமாளிப்பாரா ரணில்? - செய்திகளின் தொகுப்பு

    இலங்கை பொருளாதார நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது. பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

    அவரைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க 6வது முறையாக இலங்கை பிரதமராகியுள்ளார்.

    இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், வன்முறை, அரசியல் நெருக்கடி, ராபக்ஷ சகோதரர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, பிபிசி தமிழ் களத்தில் இருந்து விரிவாக பதிவு செய்துவருகிறது.

    இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்:

  10. கொந்தகை மூன்றாம் கட்ட அகழாய்வு - 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

    கொற்கை அகழாய்வு

    கொந்தகை மூன்றாம் கட்ட அகழாய்வில் 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொந்தகையில் இதுவரை இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு குழிகளிலும் அருகருகே சுமார் 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    கொற்கை அகழாய்வு

    இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வை விட, 3ம் கட்ட அகழாய்வில் அதிகமாக முதுமக்கள் தாழிகள் தொடர்ந்து கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முதுமக்கள் தாழிகளை தொடர்ந்து அகழாய்வு செய்யும் பட்சத்தில் முதுமக்கள் தாழி உள்ளே முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இதனை தொடர்ந்து கொந்தகை, கீழடி, அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  11. இலங்கை நெருக்கடி: ஒரு நாள் மட்டுமே பெட்ரோல் கையிருப்பு, மின்வெட்டு அதிகரிக்கும் - ரணில் உரையின் முக்கிய அம்சங்கள்

    ரணில் விக்ரமசிங்க

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அவருடைய உரையை நீங்கள் தவறவிட்டிருந்தால், அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

    • இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த ஆண்டுக்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாயாகவே உள்ளது.
    • அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை தேடவேண்டிய உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது.
    • இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய தேதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெட்ரோல் கப்பல்கள் வரவுள்ளன. இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெட்ரோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த 3 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாள்தோறும் மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணி நேரங்களாக மாறவும் இடமுண்டு.
    • இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டாலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டாலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
    • மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
    • குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.
    • உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  12. கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

    கார்த்தி சிதம்பரம்

    பட மூலாதாரம், Getty Images

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ இன்று காலையிலிருந்து சோதனை நடத்தி வருகிறது.

    ஏற்கெனவே கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக, இந்த சோதனை நடைபெற்று வருவதாக, ஏ.என்.ஐ மற்றும் பி.டி.ஐ செய்தி முகமைகள் தெரிவித்துள்ளன.

    கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இச்சோதனை நடைபெற்று வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    சோதனை குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம், "எத்தனை முறை என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால், நிச்சயமாக சாதனை எண்ணிக்கைதான்" என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 3
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 3

  13. ஞானவாபி மசூதி சர்ச்சை - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    ஞானவாபி மசூதி

    பட மூலாதாரம், ANI

    உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரிக்க உள்ளனர். மசூதி நிர்வாகத்தை கவனித்து வரும் அஞ்சுமன் இண்டோடெஜாமியா மசூதி குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

    கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மசூதியில் நடைபெறும் ஆய்வுப்பணிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.

    ஞானவாபி மசூதியில் நடைபெற்று வந்த ஆய்வு நேற்று முடிவடைந்தது. இந்த ஆய்வின்போது மசூதியில் சிவலிங்கம் கிடைக்கப் பெற்றதாக, இந்து தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அது சிவலிங்கம் அல்ல, நீரூற்று என, முஸ்லிம் தரப்பினர் நிராகரித்துவிட்டனர்.

  14. தமிழ்நாடு பாஜக வெளியிட்ட தமிழ்த்தாய் படத்தால் சர்ச்சை

    தமிழ்நாடு பாஜக வெளியிட்ட தமிழ்த்தாய் படத்தில் 'ஸ' என்ற எழுத்து இடம்பெற்றதால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. மேரியோபோல் ஆலையில் சிக்கிய யுக்ரேன் படையினர் வெளியேற்றம்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், REUTERS

    யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த யுக்ரேன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக வெளியேற்றப்பட்டதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

    படுகாயமடைந்த 53 வீரர்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த நோவாசோவ்ஸ்க் நகருக்குக் அழைத்துச் செல்லப்பட்டதாக யுக்ரேன் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஹன்னா மாலியார் தெரிவித்தார்.

    மேலும், 211 வீரர்கள், கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த ஒலெனிவ்கா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.

    அஸவ்ஸ்டால் ஆலையில் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற இருநாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் உருவாகியிருப்பதாக, ரஷ்யா முன்னதாக தெரிவித்திருந்தது.

    டஜன் கணக்கிலான பேருந்துகள் மூலம் யுக்ரேன் படையினர் அந்த ஆலையிலிருந்து திங்கள்கிழமை மாலை வெளியேற்றப்பட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    அதேபோல, யுக்ரேன் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்படும் வீடியோக்களை ரஷ்ய அரசு ஊடகமும் வெளியிட்டுள்ளது.

  16. நெல்லை கல்குவாரி விபத்து - 47 மணி நேரத்திற்கு பின் 4-வது நபர் சடலமாக மீட்பு

    நெல்லை கல்குவாரி விபத்து

    நெல்லை கல்குவாரி விபத்தில் 47 மணிநேரத்திற்கு பின் 4- வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

    நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் ராட்சத கல் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதனையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி திங்கள்கிழமை இரண்டாவது நாளாக நடந்தது. இதில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்களும் ஈடுபட்டனர்.

    திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மீட்பு பணி தொடங்கி நடந்து வந்தது. மதியம் சுமார் 1.45 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்க முயற்சித்த போது மீண்டும் கற்கள் சரிந்து விழுந்ததால் 2 மணிநேரம் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

    பின்னர் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியின் அருகில் இடிபாடுகளில் சிக்கி கிடந்தவரை இரவு 11 மணி அளவில் 47 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்டனர்.

    அவரை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டிய நிலையில் நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன் என்பதும், நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி கிளீனர் என்பதும் தெரியவந்தது.

  17. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்கு இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் நேற்று இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
    • இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக முடிவு செய்துள்ளது.
    • இந்திய பிரதமர் நரேந்திரமோதி நேபாளத்திற்கு சென்றுள்ளார். புத்த பூர்ணிமாவில் லும்னியில் வழிபாடு நடத்தினார்.
    • உத்தராகண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரையில் (நான்கு கோயில்களுக்கான புனித பயணம்) தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் 10 பேரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், அதிக கறுப்பின மக்கள் வசிக்கும் இடத்தை திட்டமிட்டு தேர்ந்தெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.