விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - 8 பேர் மீது வழக்குப்பதிவு

பட மூலாதாரம், Getty Images
விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் தன்னை தாக்கி மானபங்க படுத்தியதாகக் கூறி பெண் ஒருவர் சமீபத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியும் சுலைமான் என்கிற குணசேகரன் என்பவரும் இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும் அந்த மாணவிக்கு குணசேகரன் செல்போன் வாங்கி கொடுத்து, இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவரது தாயார் கூறுகிறார்.
இந்த நிலையில், மகளிடம் இருந்த செல்போனை கொடுப்பதற்காக கடந்த 9ஆம் தேதி குணசேகரன் வீட்டுக்கு தாம் சென்றபோது, குணசேகரனின் உறவினர்கள் தாக்கி, மானபங்கபடுத்தியதாக புகார் அளிக்க மாணவியின் தாயார் சென்றார்.
ஆனால் அவரது புகார் மீது 15 நாட்களாகியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவியின் தாய் ஏப்ரல் 25ஆம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த காவலர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவயின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து இருக்கன்குடி காவல் நிலைய ஆய்வாளர் மயில் பிபிசி தமிழிடம் கூறும்போது, பெண்ணின் புகாரின்போரில் எட்டு பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம் என்றார்.
அதில் ஆறு பேர் ஏப்ரல் 22ஆம் தேதி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்த நீதிபதி குணசேகரன் உள்ளிட்ட 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 5 பேரும் திருநெல்வேலி மாவட்டம் ஜங்ஷன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த மூவரில் இருவரை கைது செய்து செய்துள்ளோம். மேலும் ஒருவரை தேடி வருகிறோம் என்று ஆய்வாளர் மயில் கூறினார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள் எட்டு பேர் மீதும் பிரி்வு 354, பெண்களை துன்புறுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.
''காவல்துறையினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வாங்கி தர வேண்டும். இல்லையெனில் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு








