நன்றி நேயர்களே
இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- இலங்கை தங்காலை கால்டன் பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
- இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்குவார்களாயின், ஜனாதிபதி பதவி விலக தயார் என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர் கூட்டத்தில் கூறியதாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளுடன் தனியாக பெண் ஒருவர் படகில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
- ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- டெல்லியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பிரதமரை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
- உத்தரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்ட்டிரா, மிஸோராம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 2 குண்டு வெடிப்புகளில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்தனர். இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.