மேரியோபோலில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கில் ரஷ்யப்
படைகள் தாக்குதல் நடத்தியதற்கு யுக்ரேனின் தெற்கு நகரமான மிக்கோலைவ் நகர மேயர் ஒலெக்சாண்டர்
சென்கேவிஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தத்திற்குரியது என அவர் தெரிவித்தார்.
ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திய அந்த திரையரங்கில் முன்னதாக
சுமார் 1,000 முதல் 1,200 பேர் தஞ்சம் புகுந்திருந்ததாக
மேரியோபோல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர்
என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.
ஒலெக்சாண்டர் சென்கேவிஷ் பிபிசியிடம் பேசுகையில், “இந்த தாக்குதலை ரஷ்ய நாசிசம் என நான் கூறுவேன், ஏனெனில்
அவர்கள் மக்களை கொன்றுள்ளனர். யுக்ரேனை ‘நாசிக்கள் அல்லாத’
அல்லது ‘ஆயுதங்கள் அல்லாத’தாக மாற்ற முயற்சிப்பதாக ரஷ்யா கூறுவது முற்றிலும் பொய். ஏனெனில் ரஷ்யப்படைகள்
தற்போது பொதுமக்களை கொன்றுள்ளனர்” என தெரிவித்தார்.
“அவர்களுக்கு (ரஷ்யப்படை) ரத்தத்தின் சுவை பிடித்துவிட்டது
என நான் நினைக்கிறேன்” என்றார்.
“நாசிக்கள் அல்லாத” யுக்ரேனாக மாற்றும் “சிறப்பு ராணுவ நடவடிக்கை”
என, இந்த போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நியாயப்படுத்தியுள்ளார்.
ஆனால், புதினின் இந்த கூற்று பலராலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.