யுக்ரேன் Vs ரஷ்யா: டொனியட்ஸ்க் ஏவுகணை தாக்குதலில் 20 பேர் பலி

இன்று காலையில் யுக்ரேனின் டொனியட்ஸ்க் பிரதேசத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை: நாடாளுமன்றத்தில் நாளை விளக்கம் தரும் ராஜ்நாத் சிங்

    பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை கலன் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நாளே (மார்ச் 15) விளக்கம் அளிக்க உள்ளார்.

    பாகிஸ்தானில் மார்ச் 9ஆம் தேதி, இந்தியாவில் இருந்து தவறுதலாக இயங்கியதாகக் கூறப்படும் ஏவுகணை விழுந்தது. அந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படாதபோதும், நடந்த சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.

    அதேசமயம், அந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்கள் கழித்தே பாகிஸ்தான் வெளியுலகுக்கு அறிவித்தது. அதன் பிறகே இந்தியாவும் நடந்த நிகழ்வு பற்றிய விளக்கத்தை செய்திக்குறிப்பு வாயிலாக விளக்கியது.

    சம்பவ நாளில் பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு நகரில் விழுந்த பொருளை விவரிக்கையில் ஏவுகணை போல தோற்றமளித்த ரசாயன ஆயுதம் ஏதுமில்லாத பொருள் அதிவேகமாக பறந்து வந்து விழுந்ததாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.

    ஆனால், அது இந்தியா ரஷ்யா உதவியுடன் தயாரித்துள்ள பிரமோஸ் போன்ற ஏவுகணையின் மாதிரி கலன் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இணையத்திலும் அது குறித்த படங்கள் பகிரப்பட்டன.

    இந்த விவகாரம் பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏவுகணை பறந்து வந்தபோதும் அதற்கு சரியான எதிர்வினையை ஆற்றவில்லை என்று இம்ரான் கான் அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

    இந்த நிலையில், இந்திய ஏவுகணை விழுந்த சம்பவம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்கவிருக்கிறார்.

    இந்த ஏவுகணை விழுந்தது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  2. தமிழகத்தில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    தமிழகத்தில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,51,996ஆக உயர்ந்துள்ளது.

    தற்போதுவரை தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1,054பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இன்றைய நிலவரம்:பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 40,825

    பரிசோதனை செய்யப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை: 40,757

    குணமடைந்தோரின் எண்ணிக்கை: 204

    இன்று கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  3. விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க – தமிழக அரசு பதில் மனு

    விஜய்

    பட மூலாதாரம், ACTOR VIJAY

    நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார். இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்தது.

    ஆனால், அந்த வரித்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் நடிகர் விஜய் செலுத்தாத காரணத்தால் காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.

    ஆனால், நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் வரி செலுத்த காலதாமானது எனவும் அபராதத்தொகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

  4. நீட் மசோதா: ஆளுநர் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

    டி.ஆர்.பாலு

    பட மூலாதாரம், ANI

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (மார்ச். 14) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

    அதில், தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் எனவும், அவருடைய இந்த போக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அவர் கனவ ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் அளித்துள்ளார்.

    இந்த நோட்டீஸ் குறித்து நாளை கேள்வி நேரம் முடிந்தவுடன் பேசுவதற்கு அனுமதிப்பதா வேண்டாமா என மக்களவை நாளை கூடியதும் அதன் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா எடுக்கும் முடிவைப் பொறுத்து தெரிய வரும்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் Vs ரஷ்யா: டொனியட்ஸ்க் ஏவுகணை தாக்குதலில் 20 பேர் பலி: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    இன்று காலையில் யுக்ரேனின் டொனியட்ஸ்க் பிரதேசத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

    இந்த தாக்குதல் வருத்தத்திற்குரியது எனவும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகை, “கடல் கடந்த யுக்ரேனின் முதலாளிகள் யுக்ரேனிய ராணுவத்திற்கு கட்டளையிடுகிறார்கள் என்று தோன்றுகிறது” என தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதனிடையே, இத்தாக்குதல் குறித்த குற்றச்சாட்டை யுக்ரேன் மறுத்துள்ளது.

    கிழக்கு யுக்ரேனில் அமைந்துள்ள டொனியட்ஸ்க் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் கடந்த 2014ல் இருந்து யுக்ரேனிய படைகளுக்கு எதிராக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை தன்னாட்சி மிக்க பகுதியாக அங்கீகரிப்பது, யுக்ரேனுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கான ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.

  6. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர் நடராஜன் சந்திரசேகரன் யார்?

    நடராஜன் சந்திரசேகரன்

    பட மூலாதாரம், Getty Images

    ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற டாடா குழும உறுப்பினர்களின் நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய இல்கர் ஐசி நியமிக்கப்பட்டார். ஆனால், அவருடைய நியமனத்திற்கு இந்தியாவில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, அந்த பதவியை ஏற்க இல்கர் ஐசி மறுத்தார்.

    இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். என்.சந்திரசேகரன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் 100க்கும் மேற்பட்ட டாடா இயக்க நிறுவனங்களை வழிநடத்தி வருகிறார்.

    கடந்த அக்டோபர் 2016ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் சந்திரசேகரன் இணைந்தார். ஜனவரி 2017ல் அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2016ல் அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அப்பதவியில் என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

    டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் உள்ளிட்ட டாடா குழும இயக்க நிறுவனங்களின் நிர்வாகக்குழு தலைவராகவுன் இவர் உள்ளார். இந்நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக 2009 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளார்.

    டிசிஎஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகால நீண்ட பணி அனுபவத்திற்கு பின், என்.சந்திரசேகரன் அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கல்லூரி படிப்பு முடித்த பின்னர், சந்திரசேகரன் 1987-ல் டாடா நிறுவனத்தில் இணைந்தார். பின் 2009ல் டிசிஎஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

    டாடா குழுமத்தின் தலைவராக பதவி வகிக்கும் பார்ஸி அல்லாத முதல் நபர் சந்திரசேகரன் ஆவார்.

  7. சீனாவிடம் ராணுவ உதவி கேட்கவில்லை: ரஷ்யா

    ரஷ்யா சீனாவிடமிருந்து ராணுவ உதவி கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிய விவகாரம் உட்பட ரஷ்ய அதிபர் மாளிகையிலிருந்து மேலதிக தகவல்கள் வந்துள்ளன.

    ரஷ்யா சீனாவிடம் ராணுவ உதவி கேட்கவில்லை எனவும், “யுக்ரேனில் தங்களது சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடர தங்களிடம் சுயாதீன திறன் இருப்பதாகவும்,” ரஷ்ய அதிபருக்கான செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் மீதான நடவடிக்கை குறித்த ரஷ்யாவின் திட்டங்கள் “முழுமையாகவும்” அசல் கால அட்டவணைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

  8. தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்த புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர்

    கல்வி

    ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்த கல்வித்துறை இயக்குநரின் செயல் அனைவரின்‌ கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த சில நாட்களாகவே புதுச்சேரியில் கொரோனா தொற்றானது வெகு குறைவாக பதிவாகி வருவதால் மழலையர் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு இன்று மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    இந்த சூழலில், புதுச்சேரி லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு பள்ளியில் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகெளடு தனது மகன் அஸுகோஷை (வயது 5)அரசுப் பள்ளியில் அவரே நேரில் அழைத்து வந்து சேர்த்தார்.

    தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்தது தொடர்பாக ருத்ரகெளடு கூறுகையில், “எனது மகனை எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறோம்.

    அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. மழலையர் வகுப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை கல்வி சிறப்பாக இருக்கும். மேலும் அரசு பள்ளியில் எனது மகனை சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது," என தெரிவித்தார்.

    இது குறித்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் ராசு கூறுகையில், "பெற்றோர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.

    புதுச்சேரியில் மற்ற பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளது. கல்வியைத் தாண்டி பல விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் அனைவரும் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் அதிகம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறோம்,” என தெரிவித்தார்.

  9. ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள் - ஓர் அலசல்

      • எழுதியவர், சஹர் பலோச்
      • பதவி, பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத்
    வாகா எல்லை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தானின் மியான் சன்னுவில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணை கலன் (பிரமோஸ் போன்ற வடிவிலானது) "தற்செயலாக" விழுந்த பிறகு, பாகிஸ்தான் "தீர்க்கமாக சிந்தித்து வெளிப்படுத்திய எதிர்வினையை" பாராட்ட இந்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங்கின் பயன்படுத்திய வார்த்தைகள் இவை.

    இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை பாராட்டிய ஒரே இந்தியர் சுஷாந்த் சிங் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அணுசக்தி திறன்களை கருத்தில்கொள்ளும்போது, இந்த 'தற்செயலான ஏவுகணை' சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

  10. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு: 19வது நாளான இன்று என்ன நடக்கிறது?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Ukraine State Emergency Service

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 19வது நாளில் என்ன நடக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்:

    • யுக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான நெருக்கடியை தீர்க்கும் விதமாக, இரு நாட்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் நான்காம் சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தை போர் நிறுத்தம், ரஷ்ய படைகளை திரும்பப் பெறுதல், யுக்ரேனுக்கான பாதுகாப்பு உறுதி உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டது என யுக்ரேன் தரப்பின் மிக்கைலோ பொடாலியாக் தெரிவித்துள்ளார்.
    • ஆனால், யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் விமான தயாரிப்பு ஆலையில் குண்டுவீசி தாக்குதலை நடத்தியது.
    • தலைநகர் கீயவுக்கு அருகேயுள்ள பகுதிகள் மற்றும் கிழக்கில் உள்ள லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 10 “மனிதநேய வழித்தடங்கள்” மூலம் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற முயற்சித்து வருவதாக, துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், தங்களிடம் ரஷ்யா உதவி கோரியதாக கூறுவது தவறானது என சீனா தெரிவித்துள்ளது.
    • தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்பதாக, ரஷ்யா கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்வது குறித்து யோசித்து வருகிறது என இரு இந்திய அதிகாரிகளை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
  11. கீயவ் அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல்: புகைப்படங்கள்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், State Emergency Service of Ukraine

    கீயவ்வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்ய படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய அவசரகால சேவை தெரிவித்துள்ளது. முன்னதாக, இத்தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கீயவின் ஓபோலோன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒன்பது தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இத்தாக்குதல் நடைபெற்றது.

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    இந்த தாக்குதலில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 9 பேருக்கு நிகழ்விடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு வசித்துவந்த 15 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், 63 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு வெகு அருகே நுழைந்துள்ள நிலையில், அந்நகரின் வடக்கு புறநகர் பகுதியில் இன்று காலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த செய்தியில் பதிவேற்றப்பட்டுள்ள படங்கள் தாக்குதல் நிகழ்விடத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

  12. ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க இந்தியா யோசனை என தகவல்

    எண்ணெய்

    பட மூலாதாரம், Getty Images

    தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்பதாக, ரஷ்யா கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்வது குறித்து யோசித்து வருகிறது என இரு இந்திய அதிகாரிகளை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையில், சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்ட்டிலிருந்து சில ரஷ்ய வங்கிகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ளன.

    இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதில், 2% முதல் 3% வரை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது.

    ஆனால், எண்ணெய் விலை அதிகரித்துவருவதால், அதன் எரிசக்தி மீதான செலவைக் குறைக்கும் வழிகளை இந்திய அரசு ஆலோசித்துவந்ததாக, ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தள்ளுபடி விலையில் எண்ணெய் பொருட்களை வாங்குவது மகிழ்ச்சியானது எனவும் பொருளாதார தடைகளில் சிக்குவது குறித்து இந்தியா கவலைப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும், ரூபாய் (இந்திய பண மதிப்பு) – ரூபிள் (ரஷ்ய பண மதிப்பு) வர்த்தக வழிமுறைகளை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  13. தங்களிடம் ரஷ்யா உதவி கோரியதாக கூறுவது தவறானது: சீனா

    அமெரிக்கா- சீனா

    பட மூலாதாரம், GETTY IMAGES

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீனாவிடம் உதவி கோரியுள்ளதாக பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

    ஆனால் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம், ரஷ்யாவின் இந்த கோரிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது.

    இந்நிலையில், சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த போரில் சீனாவின் பங்கு குறித்து “தீய நோக்கிலான” பொய்களை அமெரிக்கா பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

    மேலும், “அமைதி மற்றும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தும் நோக்கத்தில் சீனா முக்கிய பங்கை வகிப்பதாக” அவர் தெரிவித்தார்.

  14. மேரியோபோல் மருத்துவமனை குண்டுவீச்சு: கர்ப்பிணி மற்றும் சிசு உயிரிழப்பு

    மேரியோபோல்

    பட மூலாதாரம், Maxar

    மேரியோபோல் மகப்பேறு மருத்துவமனையில் ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கர்ப்பிணி பெண்ணும் அவருடைய குழந்தையும் உயிரிழந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதல் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. அதில், ஸ்ட்ரெச்சர் ஒன்றில் பெண் ஒருவர் கிடத்தப்பட்டிருந்தது, இந்த போரில் இதுவரையிலான உச்சகட்ட கொடூர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்குகடந்த சனிக்கிழமை அறுவைசிகிச்சை மூலம் சிசு வெளியே எடுக்கப்பட்டது. ஆனால், சிசு உயிருடன் இல்லை எனவும், அப்பெண்ணும் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

    இதனிடையே, அந்த மகப்பேறு மருத்துவமனையை தங்களின் படைத்தளமாக பயன்படுத்த யுக்ரேனிய தீவிரவாதிகள் கைப்பற்றியதாகவும், ஆதலால், மருத்துவமனையாக அது செயல்படவில்லை எனவும் ரஷ்ய அதிகாரிகள் ஆதாரமற்ற வகையில் கூறினர். ரஷ்யாவின் இக்கூற்றை மறுத்துள்ள யுக்ரேன் அதிகாரிகள் ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.

  15. யுக்ரேனிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்ன? – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்

    தர்மேந்திர பிரதான்

    பட மூலாதாரம், ANI

    யுக்ரேன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் ‘ஆபரேஷன் கங்கா’ மூலம் இந்தியா வந்தனர். இந்நிலையில், இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (மார்ச். 14) தொடங்கியது. அப்போது, யுக்ரேனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடிப்பது குறித்து அரசு என்ன நினைக்கிறது என, காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இந்தியா திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களை வருங்காலத்தில் மருத்துவர்களாக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை மேற்கொள்வோம்” என பதிலளித்தார்.

    “அதிர்ச்சியிலிருந்து அவர்களை மீட்பது முக்கியம். அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

  16. இறந்த மகனின் கனவை நனவாக்கிய அம்மா

    தனது சகோதரியின் குழந்தைகளுக்கு சிறப்பாக காதுகுத்து விழா நடத்த நினைத்தவர் விபத்தில் உயிரிழந்த சோகம் - அச்சு அசலாக சிலையை உருவாக்கி மகனின் கனவை நிறைவேற்றிய அம்மா - தமிழ்நாட்டில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. 12-14 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளுக்கு 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 'பூஸ்டர்' கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. ஜெயக்குமார் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

    ஆர்.எஸ்.பாரதி

    பட மூலாதாரம், DMK OFFICIAL FACEBOOK PAGE

    படக்குறிப்பு, ஆர்.எஸ்.பாரதி

    தன்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என, ஜெயக்குமார் கூறியதற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்ட அறிக்கையில், “எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அர்த்தமற்ற அவதூறுகளைப் புறந்தள்ளி, ஆக்கபூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து - காது கொடுத்துக் கேட்கும் ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பதைத் ஜெயக்குமாரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

    “நில அபகரிப்பு” “பொது வெளியில் அராஜகம்” “கொலை முயற்சி வழக்கு” உள்ளிட்ட புகார்களுக்கு ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர, இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல.

    சட்ட அமைச்சராக இருந்தவருக்குச் சட்டத்தின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு விட்டதே என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது.

    ஜெயக்குமார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஆகவே அவரை கைது செய்வது அதிமுகவை எச்சரிப்பதாக எப்படி அமையும்?

    “மொட்டைத் தலைக்கும்- முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்” இந்த வியூகத்தை ஏன் அவர் முன் எடுக்கிறார்?

    ஒருவேளை “சூப்பர் ஸ்போக்ஸ்பர்சனாக” இருந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவோ இணை ஒருங்கிணைப்பாளராகவோ ஆக வேண்டும் என்ற ஆசை வந்திருக்குமேயானால் அதை வைத்து அதிமுகவிற்குள் கச்சேரி நடத்திக் கொள்ளட்டும்.

    “தர்ம யுத்தம்” நடத்தி விட்டு இணைந்தவர், இணைத்தவர்களிடம் “தர்மம்” கேட்டுப் போராடட்டும். ஆனால், திமுகவின் மீதும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மீதும் புழுதி வாரி வீசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

  19. மதுபானக் கடை மீது கல்லெறிந்த பாஜக மூத்த தலைவர் உமா பாரதி

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  20. சிக்கியுள்ள மக்களை மீட்க யுக்ரேன் முயற்சி

    தலைநகர் கீயவுக்கு அருகேயுள்ள பகுதிகள் மற்றும் கிழக்கில் உள்ள லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 10 “மனிதநேய வழித்தடங்கள்” மூலம் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற முயற்சித்து வருவதாக, துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் வெளியிட்ட காணொலியில், “பெர்டியன்ஸ்கில் (தென் கிழக்கு யுக்ரேன்) இருந்து (துறைமுக நகரமான மேரியோபோல்) உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்லும் மனிதநேய வழித்தடத்தின் இயக்கத்தின் தடைகளை உடைக்க மீண்டும் ஒருமுறை முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.