'ரொட்டித் துண்டுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை'

விட்டுக்கொடுப்பது ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி பேசியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி.

    இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.

    இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஆற்றிய உரையில், யுக்ரேன் வான் பரப்பை ‘நோ ஃப்ளை சோன்’ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பது குறித்து ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார். ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
    • யுக்ரேனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர்கள் (612 மில்லியன் பவுண்ட்) மதிப்புக்கு பாதுகாப்பு உதவிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • புதன்கிழமை காலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக, கீயவ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கீயவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
    • யுக்ரேனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் ரொட்டித்துண்டுகளுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை ரஷ்யப் படைக்ள் இன்று சுட்டுக் கொன்றதாக, யுக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோல் துணை மேயர் கூறுகையில், ரஷ்யப் படைகள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட சுமார் 400 பேரை “பணயக் கைதிகளாக” பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
    • ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது என, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
    • யுக்ரேன் தரப்பை சேர்ந்த மிக்கைலோ பொடாலியாக் கூறுகையில், பேச்சுவார்த்தையில் “அடிப்படையில் முரண்பாடுகள்” உள்ளன எனவும், ஆனால், “சமாதானத்துக்கான வாய்ப்பு” உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

    ஜப்பான்

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

    ரிக்டர் அலகில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல இடங்களில் மக்களால் நிற்கவே முடியாத நிலை இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஃபுகுஷிமா உள்ளிட்ட மாநிலங்களில் பின்னதிர்வுகள் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 1 மீட்டர் உயரத்துக்கு சுனாமி வரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

  3. வெம்பக்கோட்டையில் சங்ககால வளையல்கள் கிடைத்துள்ளன - தங்கம் தென்னரசு

    வெம்பக்கோட்டை

    பட மூலாதாரம், bbc

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் தொல்லியல் துறையால் நடைபெறும் அகழாய்வு பணியை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்றின் கரையில் உச்சிமேடு என்ற பகுதியில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணியை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அகழாய்வில் காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகள் சேகரிக்கப்பட இருப்பதாகவும் மேலும் இப் பகுதியில் சமதளத்திலிருந்து சுமார் 2 மீட்டர் உயரம் கொண்ட இந்த தொல்லியல் மேட்டில் இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் நுண்கற்காலக் கருவிகள் மற்றும் பல பல வகையான பாசிமணிகள் மற்றும் சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள், மற்றும் சங்க கால வளையல்கள் மற்றும் விரல் மோதிரங்கள் மற்றும் சில்லு வட்டுகள் மற்றும் இரும்பு, உருக்கு உள்ளிட்டவைகள் இதுவரை கிடைத்து உள்ளன என தெரிவித்தார்.

    மேலும், இத்தொல்லியல் மேட்டில் சுடுமண்ணாலான உறைகிணறு மற்றும் குழாய்கள் மேற்பரப்பில் காணப்பட்டதோடு, முழுமையான மற்றும் முழுமைபெறாத சங்கு வளையல்கள் மிக அதிகமாக இந்த தொல்லியல் மேட்டில் கிடைத்துள்ளன என்று கூறினார்.

    இத்தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களின் காலத்தை உரிய அறிவியல் பகுப்பாய்வு செய்து அதன் காலத்தைத்தையும் தொன்மையையும் அறிவதோடு தமிழர்களின் நீண்ட கால பண்பாட்டு வரலாற்றினை உலகறியச் செய்வதே இந்த அகழ்வாய்வின் நோக்கம் என்று தெரிவித்தார்.

  4. ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை விதியுங்கள்: அமெரிக்காவை வலியுறுத்திய ஸெலென்ஸ்கி

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், ரஷ்யா என்னுடைய நாட்டை மட்டும் தாக்கவில்லை எனவும், “எங்களுடைய நன்மதிப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியிருக்கிறது,” எனவும் தெரிவித்தார்.

    மேலும், யுக்ரேன் வான் பரப்பை ‘நோ ஃப்ளை சோன்’ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பது குறித்தும் ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார்.

    “இதனை கேட்பது அதிகப்படியானதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த போரில் இதுவரையிலான அமெரிக்க ஆதரவுக்கு யுக்ரேன் அதிபர் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த போரில் உதவியது மற்றும் துணைநின்றமைக்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் “தனிப்பட்ட ஈடுபாடு” குறித்தும் ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.

    ஆனால், இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றம் பல விஷயங்களை செய்ய வேண்டும் எனவும், “ரஷ்ய ராணுவம் தாக்குதலை நிறுத்தும்வரை” அந்நாட்டுக்கு எதிராக பல தடைகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    ரஷ்யாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் தடை விதிக்க வேண்டும் என ஸெலென்ஸ்கி பரிந்துரைத்தார்.

    “ரஷ்ய சந்தையிலிருந்து அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் உடனடியாக வெளியேற வேண்டும். ஏனெனில், அதில் எங்களின் ரத்தக்கறை படிந்துள்ளது” என ஸெலென்ஸ்கி கூறினார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, விட்டுக்கொடுப்பது குறித்து ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை: அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் பேச்சு

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார். யுக்ரேன் அதிபரை நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி அறிமுகம் செய்தார்.

    அப்போது ஸெலென்ஸ்கியின் “தைரியமான தலைமை மீது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.

    இதையடுத்துபேசிய ஸெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது இந்த நகரம் தினசரி ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது எனவும், ஆனால், எப்போதும் “விட்டுக்கொடுக்காது” எனவும் தெரிவித்தார்.

    “விட்டுக்கொடுப்பது குறித்து ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான மோசமான போரை யுக்ரேன் சந்தித்து வருவதாகவும், கடந்த 8 ஆண்டுகளாக ரஷ்யவின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரொட்டித்துண்டுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை: அமெரிக்க தூதரகம்

    யுக்ரேனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் ரொட்டித்துண்டுகளுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை ரஷ்யப் படைக்ள் இன்று சுட்டுக் கொன்றதாக, யுக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. “ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்கள் ஊடுருவும் அபாயம் அதிகரிப்பு”: மக்களவையில் சோனியா காந்தி

    சோனியா காந்தி

    பட மூலாதாரம், EPA

    இந்திய ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்கள் ஊடுருவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மக்களவையில் இன்று பேசிய சோனியா காந்தி, “அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளால், முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் அக்கட்சிகளை வடிவமைக்க பயன்படுத்தப்படுகின்றன” என தெரிவித்தார்.

    மேலும், அத்தகைய உலகளாவிய சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை என அவர் தெரிவித்தார்.

    அரசு மற்றும் சமூக ஊடக நிறுவனங்களை விமர்சித்த அவர், “ஆளும் கட்சி துணையுடன் முகநூல் மூலம் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. இது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது” என தெரிவித்தார்.

    மேலும், சமூக ஊடகங்கள் மக்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்தும் சோனியா காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

    “உணர்ச்சியைத் தூண்டு பொய் தகவல்களால், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் வெறுப்பு வளர்க்கப்படுகிறது. இதுகுறித்து முகநூல் நிறுவனத்திற்கு தெரியும், அதனை அந்நிறுவனம் பயன்படுத்திக்கொள்கிறது” என அவர் தெரிவித்தார்.

    “அரசுக்கும் முகநூல் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது” என அவர் தெரிவித்தார்.

    அரசியலில் முகநூல் போன்ற சமூக வலைதளங்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என, சோனியா காந்தி வலியுறுத்தினார்.

    “இது கட்சி மற்றும் அரசியலைக் கடந்தது. யார் அதிகாரத்தில் இருந்தாலும் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

  8. சூர்யா திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி: ''எதற்கும் துணிந்தவன்-2’ நிச்சயம் இருக்காது'

      • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
      • பதவி, பிபிசி தமிழுக்காக
    எதற்கும் துணிந்தவன்

    பட மூலாதாரம், PANDIRAJ

    "'எதற்கும் துணிந்தவன்' இரண்டாம் பாகம் குறித்து இதுவரை ஐடியாவே இல்லை. ஜெயிலுக்குள்ளே போன கண்ணபிரான் திரும்ப வருவார் என்பதை சொல்லவே அப்படி காட்டினேன். ஆனால், அதை பார்ட் 2 என நினைத்து சூர்யாவின் ரசிகர்கள் பெரிய மாலையோடு என்னை பார்க்க வந்து, 'அடுத்தும் நீங்கள் அண்ணனோடு தான் படம் செய்ய வேண்டும். அதுவும் 'எதற்கும் துணிந்தவன்2' தான் வேண்டும்' என்று சொன்னார்கள்."

  9. மேரியோபோலில் வேகமாக தீர்ந்துவரும் உணவு மற்றும் மருந்துகள்: அங்கு என்ன நிலைமை?

      • எழுதியவர், ஹூகோ பசேகா
      • பதவி, பிபிசி செய்திகள், லிவிவ்
    யுக்ரேன்

    பட மூலாதாரம், SERGEI ORLOV

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    யுக்ரேனின் மேரியோபோலில் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய மருத்துவமனையில் சுமார் 400 பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் சிக்கியுள்ளனர்.

    ரஷ்யப் படைகள் “தற்போது மருத்துவமனையிலிருந்து யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கிசூடு நடத்திவருகிறது” என, யுக்ரேன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

    மேரியோபோல் நகரத்தில் சுமார் 4,00,000 பேர் தண்ணீர், மின்சாரம், எரிவாயு ஆகியவை தீர்ந்துபோய் கடுமையான சூழலில், வெளியேற வழியின்றி உள்ளனர். அங்குள்ளவர்களை தொடர்புகொள்வதும் மிகடும் கடினமானதாக உள்ளது.

    தன்னுடைய 57 வயது தாய் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்த டிமிட்ரோ ஹோர்ஷகோவ், தீவிர சிகிச்சைக்காக பிராந்திய மருத்துவமனைக்கு அவரை அழைத்ததாகவும், ஆனால், பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். தன்னால் தொடர்புகொள்ள முடிந்த நண்பர்களிடமிருந்து அவர் சமீபத்திய தகவல்களை பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.

    “பல தகவல்கள் வெளியே வருவதில்லை” என அவர் தெரிவித்தார். “மேரியோபோலில் எனக்கு சிலரை தெரியும். அவர்களின் பெற்றோர்கள் மருத்துவப் பணியாளர்களாக உள்ளனர், அவர்களும் மருத்துவமனையில் உள்ளனர். தற்போது, காயமடைந்த தங்கள் படையினரை ரஷ்யப் படைகள் அந்த மருத்துவமனைக்கு அனுப்புகின்றன. இந்த மருத்துவமனையில் மிகச் சிறந்த வசதிகள் உள்ளன. மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினர் அடித்தளத்தில் உள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

    உணவு மற்றும் மருந்துகள் வேகமாக தீர்ந்துவருகின்றன, அந்நகரத்தில் எந்தவொரு மனிதநேய உதவிகளும் அனுமதிக்கப்படுவதில்லை.

    அங்குள்ள நிலைமை “கெட்ட கனவு” போன்று உள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

  10. யுக்ரேனுக்கு 800 மில்லியன் டாலர்கள் மதிப்பில் பாதுகாப்பு உதவிகள்: அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்ப்பு

    ஜோ பைடன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர்கள் (612 மில்லியன் பவுண்ட்) மதிப்புக்கு பாதுகாப்பு உதவிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    யுக்ரேன் அதிபர் வொலாடிமிரி ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று பேச உள்ள நிலையில், இந்த முடிவு வெளியாகியுள்ளது.

    பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் யுக்ரேனுக்கு சிறப்பான விதத்தில் பயன்பட்ட ஜாவ்லின் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் உள்ளிட்ட கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை அதிகளவில் வழங்குதல் ஆகியவை இந்த பாதுகாப்பு உதவிகளில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், ஸ்விட்ச்பிளேடு என அழைக்கப்படும்,ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான ட்ரோன்களும் யுக்ரேன் ரணுவத்திற்கு வழங்க அமெரிக்க வெள்ளை மாளிகை யோசித்துவருவதாக, அமெரிக்க ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.

    ஏற்கெனவே யுக்ரேனுக்கு கடந்த வாரம்சுமார் 1 பில்லியன் டாலர்கள் (766 மில்லியன் பவுண்ட்) ஒதுக்க பைடன் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

  11. தி காஷ்மீர் ஃபைல்ஸ்: காஷ்மீரி பண்டிட்கள் குறித்து தீவிரமாகும் விவாதம் - இதுவரை அரசுகள் என்ன செய்துள்ளன?

      • எழுதியவர், அபய் குமார் சிங்
      • பதவி, பிபிசி செய்தியாளர்
    காஷ்மீர்

    பட மூலாதாரம், MANAN VATSYAYANA/AFP VIA GETTY IMAGES

    காஷ்மீரி பண்டிட்களின் மனவலி இரண்டுவகையாக உள்ளது. முதலாவது 1990களில் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் அனுபவிக்கும் வலி. இரண்டாவது, பள்ளத்தாக்கை விட்டு வெளியேறாதவர்களின் வலி. அவர்கள் நிச்சயமற்ற சூழலில் பல ஆண்டுகளாக பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்.

  12. கார்கீவில் இதுவரை குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் – யுக்ரேன் அதிகாரிகள்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யப் படைகள் தனது தாக்குதலை தொடங்கியதிலிருந்து, யுக்ரேனின் வட-கிழக்கு நகரமான கார்கீவில் 500 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என, அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை குறித்து பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.

    யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமாக கார்கீவ், கடந்த சில வாரங்களாக கடுமையான ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும், வெடிபொருட்கள் பற்றாக்குறை காரணமாக ரஷ்யப் படை அந்நகரத்தை சுற்றிவளைக்க போராடிவருகிறது.

    கார்கீவில் உள்ள நெமிஷ்லியான்ஸ்க் மாவட்டத்தில் பல்லடுக்கு மாடி கட்டடத்தில் நடைபெற்ற ஷெல் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக, அவசர சேவை பிரிவு சமீபத்தில் வெளியிட்ட தினசரி பதிவில் தெரிவித்துள்ளது.

    யுக்ரேனில்இதுவரை குறைந்தது 691 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், சுமார் 1,143 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

  13. மாவோ ஆட்சியில் சீனர்கள் மாம்பழத்தை வணங்கியது ஏன்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. ரஷ்ய தாக்குதல்: ஃபாக்ஸ் நியூஸ் ஒளிப்பதிவாளர் உட்பட இருவர் உயிரிழப்பு

    ரஷ்ய தாக்குதல்

    பட மூலாதாரம், FOX NEWS/PA

    ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் பியர் ஸக்ர்ஸேவ்ஸ்கி (55) மற்றும் ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா (24) ஆகியோர், பணியில் ஈடுபட்டிருந்தபோது, கீயவ் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹோரென்காவில் ரஷ்ய தாக்குதலின்போது அவர்களுடைய காரில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

    அவர்களுடன் உடன் பணிபுரியும் பெஞ்சமின் ஹால் (39) என்பவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஃபாக்ஸ் நியூஸ் தலைமை செயல் அதிகாரி சூசேன் ஸ்காட் இச்சம்பவம் “நெஞ்சை பிளப்பதாக” உள்ளது என தெரிவித்தார்.

    ஒரு ஊடகவியலாளராக ஸக்ர்ஸேவ்ஸ்கியின் “ஆர்வமும் திறமையும் ஈடுசெய்ய முடியாதது” என அவர் தெரிவித்தார்.

    “பியர் ஸக்ர்ஸேவ்ஸ்கி போர் புகைப்படக் கலைஞர். ஈராக் முதல் ஆப்கானிஸ்தான், சிரியா வரை அவர் எங்களுடன் இருந்த இந்த நீண்ட காலத்தில், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அனைத்து சர்வதேச செய்திகளையும் வழங்கியுள்ளார்” என தெரிவித்தார்.

    இத்தாக்குதலில் உயிரிழந்த ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் தேசிய பாதுகாப்புப் பிரிவு நிருபர் ஜெனிஃபர்கிரிஃபின் கூறுகையில், “அவர் திறமையான ஊடகவியலாளர். எங்களின் இழப்பு குறித்து வார்த்தைகளில் விவரிக்க முடியாது” என தெரிவித்தார்.

  15. காஷ்மீர் ஃபைல்ஸ்: இவ்வளவு சர்ச்சை ஏன்? படத்தை பாஜக ஆதரிப்பதன் காரணம் என்ன?

      • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
      • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
    காஷ்மீர் ஃபைல்ஸ்

    பட மூலாதாரம், KASHMIR FILES

    1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் ஒன்று, இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. ஏன்?

  16. யுக்ரேனில் தற்போது என்ன நடக்கிறது?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், State Emergency Services in Kyiv

    இந்த நேரலைப் பக்கத்தில் இணைந்தீர்களா? யுக்ரேன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • யுக்ரேன் நகரங்களில் பரவலாக ரஷ்யப் படைகள் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. தலைநகர் கீயவில் இன்று காலையில் கட்டடங்கள் மீது ஷெல் தாக்குதல் நடைபெற்றது.
    • ஷெவ்சென்கோ மாவட்டத்தில் 12 அடுக்குமாடி கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.
    • “கடினமான மற்றும் ஆபத்தான சூழல்” குறித்து கீயவ் மேயர் விடாலி கிளிட்ஸ்செகோ எச்சரித்துள்ள நிலையில், கீயவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுஉள்ளது.
    • யுக்ரேன் – ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தை “நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது” என கூறியுள்ள யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் ஸெலென்ஸ்கி, பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
    • பேச்சுவார்த்தைக்கான யுக்ரேன் தரப்பை சேர்ந்த மிக்கைலோ பொடாலியாக் கூறுகையில், பேச்சுவார்த்தையில் “அடிப்படையில் முரண்பாடுகள்” உள்ளன எனவும், ஆனால், “சமாதானத்துக்கான வாய்ப்பு” உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோல் மேயர் கூறுகையில், ரஷ்யப் படைகள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட சுமார் 400 பேரை “பணயக் கைதிகளாக” பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
    • ரஷ்யப் படைகள் முன்னேறுவதில் யுக்ரேன் படைகளுடன் போராடி வருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  17. இந்தியில் பதில் சொன்ன மத்திய அமைச்சரை ஆங்கிலத்தில் பேச சொன்ன கனிமொழி எம்.பி

    கனிமொழி

    ஒரு தேசம், ஒரு ரேஷன் என்கிற மத்திய அரசின் திட்டம் குறித்துதிமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளிக்கத் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, "உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகவே தெரியும், இந்தியில் பேசினால் எனக்குப் புரியாது. நான் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டேன், நீங்கள் ஆங்கிலத்திலேயே பதிலளியுங்கள்" என்று கூறினார்.

    அதற்கு மொழிபெயர்ப்பு சேவைகள் கிடைக்கும் என அமைச்சர் கூறிய போதும், ஆங்கிலத்தில் பதிலளித்தால் நன்றாக புரியும் என கனிமொழி மீண்டும் கோரினார்.

    இதையடுத்து கேள்விக்கான பதிலை ஆங்கிலத்தில் தெரிவித்தார் அமைச்சர் பியூஷ் கோயல்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. “ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது”: யுக்ரேன் அதிபர்

    Facebook/Zelensky

    பட மூலாதாரம், Facebook/Zelensky

    ரஷ்யா - யுக்ரேன் இரு நாடுகளுக்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

    நேற்றிரவு அவர் வெளியிட்ட காணொளி பதிவில், “பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது” என தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால், “யுக்ரேனின் நலனுக்கான முடிவுகளை எடுக்க இன்னும் காலம் தேவை” எனவும் அவர் தெரிவித்தார்.

    ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மேலும் தொடரும்.

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி இன்று உரையாற்ற உள்ளார்.

  19. இலங்கையில் பொருளாதார நெருக்கடி: கண்டியிலிருந்து நேரலை

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்தது. எரிபொருள் இன்றி வாகனங்கள் வீதிகளில் நிறுத்தி வைப்பு. கண்டியிலிருந்து நேரலை.

  20. யுக்ரேனில் ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் நிறுத்தம்: பிரிட்டன்

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், யுக்ரேனில் முன்னேறிச் செல்வதில் ரஷ்யப் படைகள் போராடி வருவதாக தெரிவித்துள்ளது.

    யுக்ரேனால் ஏற்படும் சவால்களை சமாளிக்க ரஷ்ய படைகள் போராடிவருவதாக, அப்பதிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    யுக்ரேனிய படைகள் பாலங்களை சேதப்படுத்தியிருப்பது, “ரஷ்யா முன்னேறிச் செல்வதை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக” அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "யுக்ரேனிய ஆயுதப் படைகளின் தந்திரங்கள், ரஷ்யாவின் சூழ்ச்சியின் பற்றாக்குறையை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டன, ரஷ்ய முன்னேற்றத்தை விரக்தியடையச் செய்தன மற்றும் ரஷ்ய படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு