“ரஷ்ய படையினரின் மீது தாக்குதல் நடத்தினோம்”: யுக்ரேன் ராணுவம்
"ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினரின் மீது பேரழிவு தரும் தாக்குதலைச் செலுத்த முடிந்தது" என, யுக்ரேன் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.
மூன்று ரஷ்யா போர் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர், மூன்று ஆளில்லா ட்ரோன் வாகனங்களை அழித்ததாகவும், இரண்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் யுக்ரேன் ராணுவப்படை தெரிவித்துள்ளது. பிபிசி இதனை சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.
“அதிக மக்கள்தொகை கொண்ட யுக்ரேன் நகரங்களில்” ரஷ்யா இந்த வாரம் குண்டு வீசி தாக்குதலை நிகழ்த்திய நிலையில், அப்படைகள் டொனியட்ஸ்க் , லூஹான்ஸ்க் மற்றும் மிக்கோலைவ் ஆகிய பகுதிகளில் முன்னேறுவதில் தோல்வியடைந்துவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
“ சில பகுதிகளில் எதிரி ராணுவம் இழப்புகளை சந்தித்து பின்வாங்குகிறது” என யுக்ரேன் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலும் தங்களை வலுப்படுத்துவதிலும் இன்னல்களை சந்தித்துவருவதாகவும், மேலும், ராணுவ பயிற்சி வீரர்களை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும், யுக்ரேன் ராணுவம் நேற்றிரவு வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், தங்கள் படையினரின் இழப்புகளை ஈடுகட்ட ரஷ்யா வெளிநாட்டு வீரர்களை நாடியுள்ளதாகவும் யுக்ரேன் தெரிவித்துள்ளது.
"இந்த இழப்புகளின் விளைவாக, நீடித்த யுக்ரேன் எதிர்ப்பை எதிர்கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளை நடத்துவதற்கு ரஷ்யா போராடிக்கொண்டிருக்கிறது"என, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அதன் சமீபத்திய உளவுத்துறை குறிப்பில் தெரிவித்துள்ளது.