“கிரைமியாவை ரஷ்ய பகுதியாக யுக்ரேன் ஏற்க வேண்டும்” – ரஷ்யா நிபந்தனை

யுக்ரேன் ரஷ்ய நிபந்தனைகளை நிறைவேற்றினால், “எந்த நேரத்திலும்” ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேலும், நேட்டோ போன்ற எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைவதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. வணக்கம் நேயர்களே!

    மார்ச் 7ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் நட்பு நாடான கஜகஸ்தானில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்து வரும் சூழலில், யுக்ரேனியர்கள் தங்ளை உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் பாட்டுப் பாடி, இசை மீட்டி வருகிறார்கள்.
    • கீயவ், கார்கிவ், சுமி, மேரியோபோல் நகரங்களில் இன்று (மார்ச் 7) காலை 7 மணி முதல் பொதுமக்கள் வெளியேற வசதியாக இந்த போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று ரஷ்ய அரசு ஊடகம் தகவல் தெரிவித்தது.
    • ரஷ்யாவில் நேற்று, யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு எதிராக பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் ஆர்வலர்கள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
    • இந்திய பிரதமர் நரேந்திர மோதி, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். 35 நிமிடங்கள் நடந்த உரையாடலின்போது, இந்திய குடிமக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் செய்த உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
    • யுக்ரேனில் இருந்து வெளியேறும் மக்கள், பெலாரூஸ் அல்லது ரஷ்யாவிற்கு அகதியாக செல்லும் வகையில் திறக்கப்படும் பாதை தொடர்பான ரஷ்ய முன்மொழிவு “முற்றிலும் நியாயமற்றது” என்று யுக்ரேன் கூறியது.
    • கீயவில் ஒரு ரகசிய இடத்திலுள்ள நிலத்தடி தங்குமிடத்தில் இருந்து, யுக்ரேனின் இளம் அமைச்சர் மிக்கைலோ ஃபெடோரோவ் ரஷ்யா மீது ஒரு டிஜிட்டல் போரை நடத்தி வருகிறார்.
    • யுக்ரேனின் தகவல் தொடர்பு வசதிகளை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த வாரம் கீயவில் இதேபோன்ற தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை கார்ஹிவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது தாக்குதல் நடந்ததாகச் செய்திகள் வந்தன.
    • யுக்ரேன் படையெடுப்பை நிறுத்தக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கலந்து கொள்ள ரஷ்யா மறுத்து விட்டது.
    • ஸெலென்ஸ்கி தனது இன்றைய உரையின்போது, தொடர்ச்சியான படையெடுப்பு, “யுக்ரேனுக்கு எதிரான தன் திட்டங்களை ரஷ்யா கைவிடவில்லை,” என்பதைக் காட்டுகிறது என்று கூறினார். மேலும், “அதனால், புதிதாக ரஷ்யா மீது விதிப்பதற்கான தடைகளின் தொகுப்பு தேவை,” என்றார்.
    • யுக்ரேனுக்கான பிரிட்டிஷ் தூதர், “தீவிரமான பாதுகாப்பு நிலைமை” காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

    பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்

  2. யுக்ரெனில் இருந்து வந்த மாணவர்களை நேரில் சந்தித்த ஸ்டாலின்

    யுக்ரேன் நாட்டிலிருந்து இந்தியா வந்த மாணவர்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். மேலும், மாணவர்களின் படிப்பை இந்தியாவில் தொடர தேவையான முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. மேலூர் அருகே உயிரிழந்த சிறுமியின் உடல் காவல்துறை பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பை பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி உயிரிழப்பு வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் நாகூர் ஹனிஃபா, அவருடைய தாய், தந்தை, சகோதரர் என 8 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    உயிரிழந்த சிறுமியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆர்டிஓ முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சிறுமியின் உடல் தும்பைப்பட்டி கொண்டுவரப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் சார்பில் ஆறுதல் கூறிய பின் 5 லட்சம் ரூபாய் சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்டவர்களிடம் வழங்கப்பட்டது.

  4. அடைக்கலம் தேடி வரும் மக்களால் நிரம்பி வழியும் வீவ் நகரம்

    மேற்கு யுக்ரேன் நகரமான வீவ், ரஷ்ய படையெடுப்பால் இடம் பெயர்ந்த அகதிகளுக்கு உதவுவதற்கான அதன் வரம்பை எட்டியுள்ளதாக அதன் மேயர் திங்கள் கிழமையன்று தெரிவித்தார்.

    படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் வீவ் நகருக்குள் வந்துள்ளனர். இது நகரத்தின் வளங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வீவில் இப்போது சுமார் 200,000 பேர் தங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 பேர் ரயில் நிலையத்தின் வழியே கடந்து செல்வதாகவும் மேயர் ஆண்ட்ரி சடோவி கூறினார்.

    அடைக்கலம் தேடி வரும் மக்களால் நிரம்பி வழியும் வீவ் நகரம்

    “மற்றோர் அலை இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று கூறிய சடோவி, சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் நகரத்திற்கு வழங்கும் தங்கள் உதவியை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    திங்கள் கிழமை காலை, நகர சபை அதிகாரியான விக்டோரியா கிறிஸ்டென்கோ பிபிசியிடம், நகரத்தின் அனைத்து தற்காலிக தங்குமிட படுக்கைகளும் நிரம்பிவிட்டதாகவும் உள்ளூர் வணிகங்கள் தங்கள் கடை முகப்புகளையும் சேமிப்பு கிடங்குகளையும் திறந்து மக்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

    வீவ் நகரத்தின் மத்திய நிலையம், யுக்ரேன் முழுவதிலும் உள்ள இடங்களை விட்டு வெளியேறும் மக்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாறியுள்ளது. குறிப்பாக கார்ஹிவ், மேரியோபோல், செர்னிஹிவ் மற்றும் தலைநகர் கீயவ் ஆகிய நகரங்கள் அதிக ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

  5. “மன்னிப்பு கேட்காத வரை சூர்யா படத்தை திரையிட விடமாட்டோம்” – கடலூர் பாமக

    பொது மன்னிப்பு கேட்காத நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தை கடலூரில் திரையிடக் கூடாது என பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஜெய்பீம் திரைப்படத்தில் சாதிரீதியாகக் குறியீடுகள் இடம்பெற்றதாக சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக, நடிகர் சூர்யா வன்னியர் மக்களிடம் மன்னிப்பு கேட்காத வரை, அவர் நடிப்பில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவர் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று கடலூர் மாவட்ட பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    “மன்னிப்பு கேட்காத வரை சூர்யா படத்தை திரையிட விடமாட்டோம்” – கடலூர் பாமகவினர் எதிர்ப்பு

    இது குறித்து பாமக மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் இள. விஜயவர்மன் கடலூர் திரையரங்க உரிமையாளர்களுக்கு அளித்து கடிதத்தில், “கடந்த நவம்பர் மாதம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அதே பெயரில் இருக்க, உதவி ஆய்வாளர் அந்தோனிசாமி என்ற தலித் கிறித்தவர் மட்டும் குருமூர்த்தி என்ற வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    அவரை சாதி வெறியராக சித்தரித்து, வீட்டில் வன்னியர்களின் சின்னமான அக்னி கலசத்தை அவருடைய வீட்டில் காட்சிப்படுத்தி, வன்னியர் சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சித்தரித்ததற்கு நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்காத வரை, அவருடையதிரைப்படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பாகவும் வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

  6. "யுக்ரேனில் இருந்து பூனையைக் கொண்டு வந்தது ஏன்?" - மாணவர் கவுதம் பேட்டி

    தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவர் கவுதம், தான் ஏன், யுக்ரேனில் இருந்து வளர்ப்புப் பூனையை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார் என்பதற்கான விளக்கத்தை பிபிசி தமிழுக்கு அளித்துள்ளார். அதுகுறித்த காணொளிப் பேட்டி...

  7. யுக்ரேனை விட்டு வெளியேறிய பிரிட்டிஷ் தூதர்

    யுக்ரேனை விட்டு வெளியேறும் பிரிட்டிஷ் தூதர்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனுக்கான பிரிட்டிஷ் தூதர், “தீவிரமான பாதுகாப்பு நிலைமை” காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

    முன்னர், படையெடுப்பின் போது பிரிட்டிஷ் தூதர் மெலிண்டா சிம்மன்ஸ் மற்றும் மீதமிருந்த ஊழையர்கள் தலைநகர் கீயவில் இருந்து மேற்கு யுக்ரேனில் உள்ள வீவ் நகருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அச்சுறுத்தல் குறைவாக இருப்பதாகக் கருதப்பட்டது.

    காமன்ஸ் வெளியுறவுக் குழுவிடம் ஆதாரங்களை அளித்து, நாட்டிலுள்ள அனைத்து பிரிட்டன் தூதரக அலுவலகங்களும் தற்போது மூடப்பட்டுவிட்டதாக ட்ரஸ் கூறியுள்ளார்.

  8. பிரிட்டன் கூடுதலாக 175 மில்லியன் யூரோ யுக்ரேனுக்கு வழங்குகிறது

    பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டோ ஆகியோரோடு செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

    அப்போது, அவர், யுக்ரேனுக்கு உதவுவதற்காக கூடுதலாக 175 மில்லியன் யூரோவை வழங்குவதாகத் தெரிவித்தார். இதன்மூலம் இதுவரை யுக்ரேனுக்கு மொத்தமாக அளித்த நிதியுதவி பிரிட்டன் 400 மில்லியன் யூரோவை எட்டுகிறது.

  9. மேற்கு நாடுகள் ரஷ்ய அச்சுறுத்தலுக்கு விரைவாகச் செயலாற்றவில்லை: பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர்

    மேற்கு நாடுகள் ரஷ்ய அச்சுறுத்தலுக்கு விரைவாகச் செயலாற்றவில்லை

    பட மூலாதாரம், PA Media

    யுக்ரேன் எல்லையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் படைகளை குவித்தமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு நாடுகள் போதுமான அளவுக்கு முன்கூட்டியே தீர்க்கமாகச் செயல்படவில்லை என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறுகிறார்.

    “உண்மை என்னவென்றால், அதிபர் புதின் எதிர்ப்பு குறித்த அச்சுறுத்தல்களை போதுமான அளவுக்குத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை,” என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

    யுக்ரேன் மீதான படையெடுப்பு மூலம் ரஷ்யா “ஐரோப்பாவின் பாதுகாப்புக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டது,” என்று அவர் கூறினார்.

    மேலும், “நாம் இப்போது நேட்டோவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக கிழக்குப் பகுதியை வலுப்படுத்த வேண்டும்,” என்று திங்கள் கிழமையன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் வெளியுறவுக் குழுவிடம் கூறினார்.

    மேலும், “ஏற்கெனவே எஸ்தோனியாவுக்கு அதிக படைகளை அனுப்பியுள்ளோம். ஆனால், இன்னும் செய்ய வேண்டியுள்ளது. நேட்டோ முழுவதுக்குமான பாதுகாப்புச் செலவினங்களில் நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டும்,” என்றார்.

  10. ஷெல் குண்டுகளுக்குப் பயந்து தப்பிக்கும் யுக்ரேன் மக்கள்

    ரஷ்ய படையெடுப்பில் நடத்தப்படும் ஷெல் குண்டு தாக்குதலில் இருந்து யுக்ரேன் மக்கள் பயந்து ஓடும் காட்சி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, பெலாரூஸ் வந்த யுக்ரேன் தூதுக்குழு

    யுக்ரேன் தூதுக்குழு மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக பெலாரூஸுக்கு வந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்களால் தெரிவிக்கப்படுகிறது. முந்தைய இரண்டு அமர்வுகளில் சமாதானத்தை நோக்கி எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

    நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் நகர மையங்கள் மீது கடுமையான ரஷ்ய ஷெல் தாக்குதல்கள் தொடர்வதால், யுக்ரேனிய குடிமக்கள் ராணுவ நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அனுமதிப்பது குறித்த விஷயங்களிலேயே மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையின் கவனம் இருக்கு என்று சொல்லப்படுகிறது.

    சனிக்கிழமை அன்று, மனிதாபிமான ரீதியிலான வழித்தடங்களை நிர்ணயிப்பதற்கான முந்தைய முயற்சி, போர் நிறுத்தம் நடக்காததால் தோல்வியில் முடிந்தது.

    மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, பெலாரூஸ் வந்த யுக்ரேன் தூதுக்குழு

    ஞாயிறு அன்று இரவில், ரஷ்யாவின் புதிய முன்மொழிவை யுக்ரேனின் துணை பிரதமர் இரினா வெரேஷுக், “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார். கீயவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரூஸுக்குச் செல்ல பாதுகாப்பான பாதையையும் கார்ஹிவில் உள்ளவர்களுக்கு ரஷ்யாவிற்கு மட்டுமே செல்லக்கூடிய ஒரு பாதையையும் அந்த முன்மொழிவு கொண்டிருந்தது.

    யுக்ரேனிய அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் இந்தத் திட்டத்தை “முற்றிலும் நியாயமற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    படையெடுப்பு 12-வது நாளாகத் தொடர்வதால், இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறியுள்ளன.

  12. பொதுமக்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தும் யுக்ரேன்

    ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது. யுக்ரேனிய பேச்சுவார்த்தைக்குழுவுக்கு தலைமை தாங்கும் மிகைலோ பொடோலியாக். பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ரஷ்யாவை வலியுறுத்தினார்.

    அவர் தன்னுடைய ஒரு ட்வீட்டில், “சில நிமிடங்களில் நாங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளோம். பொதுமக்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதை ஒரு விவாதமாக நம்பும் நாட்டின் பிரதிநிதிகளுடன் நாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இது அப்படியல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. யுக்ரேன்-ரஷ்யா மோதல்: தற்போதைய நிலவரம் என்ன?

    யுக்ரேன் ரஷ்யா மோதல் குறித்த சமீபத்திய செய்திகளுடன் சிறப்பு நேரலை

  14. சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் இருக்கும் விநாயகா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டு தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் ஒருவர் தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாக்பூர் உரிமம் பெற்று, பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் இந்தத் தொழிற்சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி

    இந்நிலையில், இன்று மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் கிளம்பும் நேரத்தில் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் ஓர் அறை தரைமட்டமானது. இதில் அங்கு பணிபுரிந்த அமீர்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் (20) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், அங்கு பணிபுரிந்த ராமர் (19) என்பவர் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடி விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  15. படையெடுப்பின் 12-வது நாளான இன்று இதுவரை நடந்த நிகழ்வுகள் பற்றிய சுருக்கம்

    நேரலையில் நீங்கள் இப்போது தான் இணைகிறீர்கள் என்றால், இதுவரை நடந்தவற்றைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    • யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று கீயவ் நேரப்படி மாலை 4 மணிக்கு நடக்கவுள்ளது.
    • யுக்ரேனில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான புதிய ரஷ்ய திட்டம் விமர்சனத்திற்கு உள்ளானது. மக்கள் வெளியேறுவதற்கான வழித்தடங்களில் சில ரஷ்யா மற்றும் பெலாரூஸ் வழியாகத் திட்டமிடப்பட்டிருந்தன. இதை பிரிட்டன் “நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட இழிவான செயல்” என்றும் யுக்ரேன் “நியாயமற்றது” என்றும் சாடியது.
    • ரஷ்யாவுடைய முன்மொழிவின்படி, யுக்ரேனின் தலைநகரமான கீயவில் இருந்து தப்பிச் செல்லும் மக்கள் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரூஸுக்கு பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் கார்ஹிவில் இருக்கும் மக்கள் ரஷ்யாவிற்கு மட்டுமே செல்லும் ஒரேயொரு பாதையில் செல்லவேண்டும்.
    • முற்றுகையிடப்பட்ட நகரங்களான மேரியோபோல் மற்றும் சுமியிலிருந்து வெளியேறுவதற்கான வழிகள் மற்றும் யுக்ரேனிய நகரங்களுக்கு ரஷ்ய நகரங்களுக்கும் செல்கிறது.
    • ரஷ்ய படைகள் மருத்துவமனைகள், நர்சரிகள் மற்றும் பள்ளிகளைக் குறிவைப்பதாகவும் தாக்குதலுக்கு நடுவே பொதுமக்களும் சிக்கியுள்ளனர் என்றும் யுக்ரேன் கூறுகிறது.
    • ஆனால் ரஷ்யா, யுக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் நவ நாஜிகளுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறி, பொதுமக்களைக் குறிவைப்பதை மறுக்கிறது.
    • எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139 டாலராக உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை மற்றுமோர் உச்சத்தை எட்டியுள்ளது. அதேநேரத்தில், அடுத்த நாள் விநியோகத்திற்கான மொத்த எரிவாயு விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சராசரி விலை முதன்முறையாக 155 பவுண்ட்ஸை எட்டியுள்ளது.
  16. கீயவில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான இந்தியர் மீட்பு

    கீயவில் துப்பாக்கிச் சூடு காரணமாகக் காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங், ஷெல் குண்டு தாக்குதலுக்கு நடுவே இந்திய விமானப் படையால் காப்பாற்றப்பட்டார். அவர் உட்பட சில இந்தியர்கள் இந்திய விமானப் படையின் விமானத்தில் இந்தியா வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. ஷெல் குண்டு தாக்குதலையும் தாண்டி வெளியேறி இர்பின் மக்கள்

    ஷெல் குண்டு தாக்குதலையும் தாண்டி வெளியேறி இர்பின் மக்கள்

    பட மூலாதாரம், Getty Images

    கீயவுக்கு அருகிலுள்ள யுக்ரேனிய நகரமான இர்பினின் மேயர், பொதுமக்களை வெளியேற்றும் பணி தொடர்வதாகக் கூறுகிறார்.

    அலெக்சாண்டர் மர்குஷின் யுக்ரேனிய ஊடகத்திடம் பேசியபோது, இன்றைய வெளியேற்றம் அமைதியானது என்றும் சுமார் 1,000 பேர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.

    ஆனால், ரஷ்ய படைகள் இர்பின் மீது தொடர்ந்து ஷெல் குண்டு தாக்குதல் நடத்தி வருவதாக மர்குஷின் கூறினார். மேலும், ரஷ்ய படைகளின் தாக்குதல்களை யுக்ரேனிய படைகள் முறியடித்துள்ளதாகவும் அவர்கள் நகரின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டதாகவும் கூறினார்.

    உள்துறை அமைச்சரின் ஆலோசகர், “வடமேற்கில் உள்ள புச்சா, ஹோஸ்டோமெல் மற்றும் வோர்செல் உள்ளிட்ட பிற நகரங்கள் இப்போது ரஷ்ய படைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நிலை மிகவும் மோசமாக உள்ளது,” என்றார்.

  18. “இயன்றவரை விரைவாக அமைதி தேவை” – அமைதிக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய கோடீஸ்வரர்

    ஒலெக் டெரிபாஸ்கா

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய கோடீஸ்வரர் ஒலெக் டெரிபாஸ்கா யுக்ரேனில் “முடிந்தவரை விரைவில்” அமைதிக்கு அழைப்பு விடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரியின் டெட் உரைக்கு எதிர்வினையாற்றிய ஓலெக் டெரிபாஸ்கா, “நமக்கு அமைதி தேவை” என்று ஹராரியின் கூற்றை ஒப்புக் கொண்டார்.

    ரஷ்யாவின் சில பெரிய தொழில்துறை நிறுவனங்களை நிறுவியரான டெரிபாஸ்கா, இந்த மோதலுக்குப் பிறகு “முழு உலகமும் வித்தியாசமாக இருக்கும். ரஷ்யா வேறுபட்டதாக இருக்கும்” என்று கூறினார்.

  19. “கிரைமியா ரஷ்ய பகுதியாக வேண்டும்” – போரை நிறுத்த கடும் நிபந்தனைகளை விதித்த ரஷ்யா

    யுக்ரேன் நெருக்கடி

    யுக்ரேன் ரஷ்யா விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், “எந்த நேரத்திலும்” தமது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

    ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர், டிமிட்ரி பெஸ்கோஃப் இது குறித்துப் பேசியபோது, யுக்ரேன் கிரைமியாவை ரஷ்யாவின் பகுதியாகவும் டொனியட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடுகளாகவும் அங்கீகரிக்க வேண்டும்.

    இதைத் தவிர யுக்ரேன் தனது அரசியலமைப்பைத் திருத்த வேண்டும். நேட்டோ போன்ற எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைவதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று பெஸ்கோஃப் கூறியுள்ளார்.

    மேலும், யுக்ரேனின் “ராணுவ விலக்கலை” ரஷ்யா முடித்து வைக்கும் என்றும் கூறியவர், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ரஷ்ய ராணுவ நடவடிக்கை உடனடியாக நின்றுவிடும் என்றும் கூறினார்.

    ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர், யுக்ரேனில் எந்தவொரு பிராந்திய கோரலையும் எங்கள் நாடு விரும்பவில்லை என்று வலியுறுத்துகிறார்.

  20. "ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" - ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், EPA

    யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஸெலென்ஸ்கி தனது இன்றைய உரையின்போது, தொடர்ச்சியான படையெடுப்பு, “யுக்ரேனுக்கு எதிரான தன் திட்டங்களை ரஷ்யா கைவிடவில்லை,” என்பதைக் காட்டுகிறது என்று கூறினார். மேலும், “அதனால், புதிதாக ரஷ்யா மீது விதிப்பதற்கான தடைகளின் தொகுப்பு தேவை,” என்றார்.

    ஸெலென்ஸ்கி, “ரஷ்ய ஏற்றுமதிகளைப் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிபொருட்களை நிராகரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.