யுக்ரேன் தாக்குதல்: குடும்பங்கள் அழைத்தும் யுக்ரேனை விட்டு வராத இந்திய மாணவர்கள். காரணம் என்ன?
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
யுக்ரேனை விட்டு வெளியில் வரமுடியாத மாணாக்கர்கள் பலர், எப்படியாவது எங்களை மீட்டு விடுங்கள் என்ற கோரிக்கையுடன் யுக்ரேனில் உள்ள பதுங்கிடங்களில் பாதுகாப்புக்காக தங்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் இரு மாணாக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஏன்?