யுக்ரேனிய நகரங்களில் ஊரடங்கு: தொடரும் தாக்குதல் - தவிக்கும் தமிழக மாணவர்கள்

"இந்திய அரசு சொல்வதுபோல் எல்லைக்குச் செல்ல வேண்டுமெனில் நாங்கள் சுமார் 800 கி.மீ பயணிக்க வேண்டும். இந்தச் சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை"

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. கீவ் செல்லும் சாலையில் போரின் சிதைவுகள்

    “கீவ் செல்லும் சாலையில் போரின் சிதைவுகள், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஆகியவற்றை இன்று காலை கடந்து சென்றோம். நேற்று ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் இவை பாதிக்கப்பட்டன. அதில் இன்னும் புகை எழுந்துகொண்டிருக்கிறது,” என்று பிபிசி செய்தியாளர் ஓர்லா குவெரின் ட்வீட் செய்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. யுக்ரேன்: ஏவுகணை தாக்குதலுக்குக் குறிவைக்கப்படும் நகரங்கள்

    யுக்ரேன்

    யுக்ரேனில் மூன்றாவது நாளாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்ய படைகள் யுக்ரேனை கைப்பற்ற முயல்கின்றன. அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் யுக்ரேனிய படைகள் அவர்களுடைய முன்னேற்றத்தை எதிர்க்கின்றன. இதுவரை நடந்தவற்றில் சில முக்கியத் தகவல்கள்:

    • தலைநகர் கீயவில், ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகள் ஒரே இரவில் நடந்தன. ஆனால், யுக்ரேனிய படைகள் நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் தக்க வைத்துள்ளன.
    • விளாதிமிர் புதினின் படைகள் கீயவ் நகர மையத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • கீயவில் உள்ள முக்கிய அரசாங்க மாவட்டங்களுக்குள் ஊடுருவுவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சி தோல்வியடைந்த பின்னர் ரஷ்ய படைகள் இப்போது மீண்டும் ஒருங்கிணைந்து கொண்டிருக்கலாம் என்று ரூசி சிந்தனைக் குழுவின் ராணுவ நிபுணர் ஜேக் வாட்லிங் பிபிசியிடம் கூறினார்.
    • யுக்ரேனின் இரண்டாவது நகரமாகக் கருதப்படும் கிழக்கு நகரமான கார்கிவில், ரஷ்ய தாக்குதலை யுக்ரேனிய படைகள் முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஷெல் தாக்குதல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நகரத்திற்குள் உலவ வேண்டாம் என்று குடிமக்களை எச்சரித்துள்ளனர்.
    • தெற்கு நகரமான ஒடெஸ்ஸாவிற்கு அருகிலும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • தென்கிழக்கு நகரமான மெலிடோபோலை கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால், பிரிட்டன் இந்தக் கூற்றில் சந்தேகம் எழுப்பியுள்ளது.
    • வீவ் உட்பட மேற்கு மற்றும் மத்திய நகரங்கள் ஏவுகணை தாக்குதல்களுக்குக் குறி வைக்கப்பட்டதாக ஸெலன்ஸ்கி கூறினார்.
  3. பிரிட்டிஷ் அரச தம்பதியான வில்லியம் மற்றும் கேட் யுக்ரேனுக்கு ஆதரவு

    கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள் இருவரும் வொலோதிமிரை 2020-ஆம் ஆண்டு சந்தித்தனர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள் இருவரும் வொலோதிமிரை 2020-ஆம் ஆண்டு சந்தித்தனர்

    பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    அவருக்கும் யுக்ரேன் மக்களுக்கும் ஆதரவாக தாங்கள் நிற்பதாக பிரிட்டிஷ் அரச தம்பதி தெரிவித்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. இந்திய பிரதமருடன் பேசிய யுக்ரேன் அதிபர்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் யுக்ரேன் அதிபர் பேசியதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    அவர் தனது டிவீட்டில், "ரஷ்யாவுக்கு எதிரான யுக்ரேனின் தீவிர பதில் தாக்குதல் குறித்து தெரிவித்தேன். எங்கள் நிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் படை எடுத்து வந்துள்ளனர். அவர்கள் (ரஷ்யர்கள்) தந்திரமாக குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு அரசியல் ரீ்தியாக ஆதரவு வழங்க இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளோம். ஆக்கிரமிப்பாளரை சேர்ந்து தாக்குவோம் என்று தெரிவித்துள்ளேன்," என்று யுக்ரேன் அதிபர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, யுக்ரேன் தனது மக்களிடம் இயந்திர துப்பாக்கிகளை விநியோகித்துக் கொண்டிருக்கிறது

    ரஷ்யாவிற்கான மிகப்பெரிய பரிசு யுக்ரேன் தலைநகர் கீயவும் செலன்ஸ்கியின் அரசாங்கமும்தான். தலைநகரில் ஏற்கனவே சண்டை நடைபெற்று வருகிறது.

    யுக்ரேன் ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்தச் சூழலில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை இங்கே விரிவாக படியுங்கள்:

  6. என்னை சிறைப்படுத்தும் ரஷ்யாவின் திட்டம் முறியடிக்கப்பட்டது: யுக்ரேன் அதிபர்

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, ஒரே இரவில் தன்னை சிறைப்படுத்தி, தங்கள் தலைவரை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை யுக்ரேன் படைகள் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.

    மேலும், யுக்ரேன் மீதான படையெடுப்பை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, ரஷ்ய மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும், தலைநகர் கீயவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் யுக்ரேன் படைகள் கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகும் உரிமையை பெற்றதாகவும் அவர் கூறினார்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் யுக்ரேன் தற்போது உறுப்பினராக இல்லை. ஆனால் அதில் சேருவதற்கான விருப்பங்களை அந்நாட்டின் அரசியலமைப்பு உள்ளடக்கியுள்ளது.

  7. மேற்கு நாடுகளுடன் ராஜரீக உறவு தேவையில்லை – தூதரகங்களை மூட வேண்டும்: ரஷ்யா

    மேற்கு நாடுகளுடனான ராஜரீக உறவு ரஷ்யாவுக்கு தேவையில்லை என, ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மேட்வேடேவ் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை நடத்தி வரும் நிலையில், மேற்கு நாடுகள் பல ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளன. இதையடுத்து, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் நீக்கப்பட்ட டிமிட்ரி, பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். அவர், ரஷ்ய சமூக வலைதளமான வி.கே. பக்கத்தில், “தூதரகங்களை மூட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    புதினால் வரையறுக்கப்பட்ட இலக்குகளை அடையும் வரை, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடரும் என, அவர் தெரிவித்தார். புதினின் நோக்கங்கள் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்ய சட்டத்தில் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு இதுவொரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  8. ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேன் பகுதிகள்: வரைபடம்

    ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேன் பகுதிகளை இந்த வரைபடத்தில் காணுங்கள்:

    யுக்ரேன் நெருக்கடி
  9. ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: தற்போது அங்கு என்ன நடக்கிறது?

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், தற்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.

    • யுக்ரேன் தலைநகர் கீயவில் நேற்று இரவு முழுவதும் சண்டை தொடர்ந்தது. நகரத்தில் உள்ள ஒரு தளத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலை முறியடித்ததாக யுக்ரேன் ராணுவம் கூறியது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில், அக்கட்டடம் மோசமாக சேதமடைந்தது.
    • யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி சனிக்கிழமையன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'ஆயுதங்களைக் கீழே போட மாட்டோம்' என்றும் 'யுக்ரேனை காப்போம்' என்றும் அறிவித்தார்.
    • யுக்ரேனின் தென்கிழக்கு நகரமான மெலிடோபோல் நகரத்தைக் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. ஆனால், ரஷ்யா கூறுவதில் சந்தேகம் இருப்பதாக பிரிட்டன் அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.
    • பிரிட்டன் ஆயுதப்படைகள் அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பே, பிரிட்டன் உள்ளிட்ட 26 நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்க சம்மதித்துள்ளதாக தெரிவித்தார்.
    • இரண்டு குழந்தைகள் உட்பட 198 யுக்ரேன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
    • மார்ச் மாதம் மாஸ்கோவில் ரஷ்யாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாட போலந்து மறுத்துவிட்டது. அதன் கால்பந்து கூட்டமைப்பு இது "செயல்படுவதற்கான நேரம்" என்று கூறியது.
    • கடந்த 48 மணிநேரத்தில் யுக்ரேனில் இருந்து 1,00,000 மக்கள் தப்பித்துள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
  10. யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியின் பின்னணி | நகைச்சுவை நடிகர் நாட்டின் அதிபரான கதை

    யுக்ரேனின் அதிபராக வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முதன்முதலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தோன்றினார். அது ஒரு பிரபலமான நகைச்சுவைத் தொடர்.

    யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி பின்னணி குறித்த இந்த வீடியோவை காணுங்கள்:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் மக்கள் 198 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர் தகவல்

    யுக்ரேன் மீதான ரஷ்யா ராணுவ தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், மூன்று குழந்தைகள் உட்பட 198 யுக்ரேன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.

    மேலும், 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் காயமடைந்ததாகவும், அவர் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் தலைநகர் கீயவில் நடந்த சண்டையில் 35 பேர் காயம்: மேயர் தகவல்

    யுக்ரேன் தலைநகர் கீயவில் நேற்றிரவு நடந்த சண்டையில் இரண்டு குழந்தைகள் உட்பட 35 பேர் காயமடைந்ததாக, கீவ் மேயர் விடாலி கிளிட்ஸ்ச்கோ தெரிவித்துள்ளார்.

    ஆனால், பொதுமக்கள் குறித்து மட்டும் அவர் கூறுகிறாரா என்பது தெளிவாகவில்லை.

    தற்போதைக்கு கீயவ் நகரில் பெரிதளவில் ரஷ்ய ராணுவம் இல்லை எனவும், ஆனால், "ரஷ்ய நாசகார குழு" இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  13. யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை

    வொலோதிமிர் ஸெலன்ஸ்கி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    யுக்ரேனின் அதிபராக வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முதன்முதலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தோன்றினார். அது ஒரு பிரபலமான நகைச்சுவைத் தொடர்.

  14. யுக்ரேன் போர்: நேட்டோ என்றால் என்ன? ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.

    இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

  15. யுக்ரேன் – ரஷ்ய நெருக்கடி: புதினை தூண்டியது எது?

    யுக்ரேன் – ரஷ்ய நெருக்கடி விவகாரத்தில் புதினை தூண்டியது எது? - இந்த காணொலியில் காணுங்கள்:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. ஆயுதங்களை கீழே போட சொல்லவில்லை: யுக்ரேன் அதிபர்

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், ZelenskyyUa/Twitter

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    யுக்ரேனில் நேற்றிரவு குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்ததையடுத்து, இன்று காலையில் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி அவரே எடுத்த காணொளி ஒன்றை வெளியிட்டார்.

    அதில், யுக்ரேன் ராணுவத்தை ஆயுதங்களை கீழே போடுமாறு தான் கூறியதாக வரும் செய்தியை மறுத்துள்ளார். ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக யுக்ரேனை காப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்று மாலை ரஷ்ய படைகள் இரவு முழுவதும் தாக்குதலில் ஈடுபடும் என அவர் எச்சரித்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. ருமேனியாவிலிருந்து இன்று மாலை தாயகம் திரும்பும் இந்தியர்கள்

    யுக்ரேனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ருமேனியா வழியாக அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, இந்திய மாணவர்கள் ருமேனியாவுக்கு பத்திரமாக வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியர்கள் ருமேனியாவிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு வந்து சேருவார்கள் என, மகாராஷ்டிரா பத்திரிகை தகவல் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    அவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமான நிலையத்தில் வரவேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் கொடுக்க தடை: முகநூல்

    முகநூல்

    பட மூலாதாரம், SOPA IMAGES

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    ரஷ்ய அரசு ஊடகம் உலகின் எந்த பகுதியிலிருந்தும் தங்களின் தள விளம்பரம் கொடுக்கவோ அல்லது அதன் மூலம் பணம் ஈட்டவோ தடை செய்துள்ளதாக, முகநூலின் பாதுகாப்பு கொள்கை பிரிவின் தலைவர் நத்தானியல் கிளேய்ச்சர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், வார இறுதியிலும் இது தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், யுக்ரேன் நிலைமை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தங்கள் தளங்களில் உள்ள மக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து பகிர்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. யுக்ரேன்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்ததாக பரவும் புகைப்படம்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பகுதியளவு சேதமடைந்தது போன்ற, சரிபார்க்கப்படாத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கீயவில் உள்ள ஸுலியானி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்ததாக, உறுதிபடுத்தப்படாத செய்திகள் வருகின்றன. அங்கு மீட்புப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    உள்ளூர் நேரடி சாட்சியத்தை மேற்கோள் காட்டி, கீயவ் விமான நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்ததாக, ராய்ட்டர் செய்தி முகமையும் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

  20. “போர் வேண்டாம்”: ரஷ்ய நகரங்களின் வீதிகளில் இறங்கி போராடும் மக்கள் - புகைப்படங்கள்

    ரஷ்ய போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

    ரஷ்யாவின் பெரிய நகரங்களான மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரங்களில், போராட்டக்காரர்கள் “போர் வேண்டாம்” (No to war) என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

    ரஷ்யாவின் தெற்கு பகுதியான சைபீரியாவின், நோவோசுபியாஸ்க் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

    போராட்டங்களில் ஈடுபட்ட 1,800க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டம் தொடர்பான சில புகைப்படங்கள் இதோ:

    ரஷ்ய போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images