ரஷ்யா-யுக்ரேன் மோதல்: குடிமக்களிடம் துப்பாக்கியை கொடுத்து சண்டையிட யுக்ரேனிய அதிபர் அழைப்பு

யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இரண்டும் கியவ் மக்களிடம், “படைகளின் நடமாட்டம் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும் பெட்ரோல் குண்டுகளை உருவாக்கவும் எதிரிகளைச் செயலிழக்க வைக்கவும் வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அ.தா. பாலசுப்ரமணியன்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, "ரஷ்ய ஆயுதப் படையில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்" - பிரிட்டன் பாதுகாப்பு செயலர்

    பிபிசி ரேடியோ 4-ல் தற்போது பேசிய பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர், பிரிட்டன் உளவுத்துறையின் சரிபார்க்கப்பட்ட மதிப்பீட்டின் படி, ரஷ்யா தனது நோக்கங்களில் முதல் நாளே தோல்வியடைந்து விட்டது எனத் தெரிவித்தார்.

    “யுக்ரேனியர்கள் சண்டையிட்டதால் அது தோல்வியடைந்தது.

    புதினின் ஈகோ காரணமாக அது தோல்வியுற்றது. அவர் ஒரு விடுதலை அளிப்பவர் என்று மக்கள் நினைப்பார்கள் என்று எண்ணியதால் அது சிதைந்தது.

    ரஷ்ய டேங்கர்கள் மற்றும் விமானங்களை யுக்ரேனியர்கள் எதிர்த்துத் தாக்கியதால் அது தோல்வியடைந்தது,” என்று கூறிய பென் வாலஸ், அதைத் தொடர்ந்து, “ரஷ்ய ஆயுதப் படைகள் சுமார் 450 பேரை இழந்துள்ளன. அவர்கள் தங்கள் உயரடுக்கு சிறப்புப் படையுடன் சேர்ந்து கீவ்வின் வடக்கே விமான நிலையத்தை கைப்பற்ற முடியாமல் போனது,” என்று அவர் கூறினார்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரிட்டன் பிரதமரிடம் பேசினார் யுக்ரேன் அதிபர்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் காலையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ட்வீட்செய்துள்ளார்.

    வலுவான தடைகள் மற்றும் அதிக ஆதரவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, ஸெலன்ஸ்கி ட்வீட் செய்துள்ளார். அதில், "இன்று [எங்களுக்கு] முன்பைவிட அதிகமாக நட்பு நாடுகளின் ஆதரவு தேவை," என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. யுக்ரேன் தலைநகரில் வான்வழித் தாக்குதலை எச்சரிக்கும் சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன

    பிபிசி செய்தியாளர்கள் படம்பிடித்த காட்சிகளில் யுக்ரேனிய தலைநகர் கீவ் முழுவதும் வான் வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சைரன்கள் தொடர்ந்து அலறுகின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ரஷ்ய ராக்கெட்டுகள் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களைத் தாக்கியதால், அவை இரவு முழுவதும், அதிகாலையிலும் நகரம் முழுவதும் ஒலித்தன.

    அதுகுறித்து, பிபிசி செய்தியாளர் நிக் பீக், "கீவ் காலையில் விழிக்கும் ஒரு நகரமாக இல்லை - ஏனெனில் சிலர் கண் மூடிவிட்டனனர்," என்று கூறியுள்ளார்.

  4. "எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம்" - யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

    இதுவரை ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

    யுக்ரேன் அதிபர்
  5. யுக்ரேன்: குடிமக்கள் உட்பட இதுவரை 137 பலியாகியுள்ளனர், 316 பேர் காயமடைந்துள்ளனர்

    ரஷ்யப் படையெடுப்பு குறித்து, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

    • இதுவரை நடந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட 137 யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஸெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    • யுக்ரேன் அதிபர் தற்போது ரஷ்யாவின் முதல் இலக்காக இருப்பதாக கூறிய அவர், அதேநேரம், கீவில் இருக்கும் அரசாங்க குடியிருப்பில் இருந்து விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கு இல்லையென்றும் அவர் கூறினார்.
    • இன்று அதிகாலை 4 மணிக்கு கீவ் மீது ரஷ்யா நடத்திய பல ஏவுகணை தாக்குதல்கள் பற்றிய செய்திகளை அவர் உறுதி செய்தார்.
    • தங்களுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்கள் முடியும் வரை யுக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்வதை நிறுத்தாது என்று அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.
  6. குண்டுகளுக்குப் பயந்து சுரங்க மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்த யுக்ரேன் மக்கள்

    யுக்ரேன் நாட்டு மக்கள் ரஷ்ய ராணுவ தாக்குதல்களின் முதல் நாளில் அதிலிருந்து தப்பிக்க சுரங்க மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

    கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் உள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில், வயதானவர்கள் மற்றும் இழுபெட்டிகளில் குழந்தைகளோடு பல குடும்பங்கள் கூட்டமாகத் தஞ்சம் புகுவதை ஒளிப்படங்கள் காட்டின.

    குண்டுகளுக்குப் பயந்து சுரங்க மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்த யுக்ரேன் மக்கள்

    பட மூலாதாரம், EPA

    யுக்ரேனில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மேலும் மெட்ரோ நிலையங்கள் வெடிகுண்டுகளில் இருந்து தப்புவதற்கான தங்குமிடங்களாகச் செயல்படுகின்றன.

    ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்கள் அண்டை நாடுகளில் பாதுகாப்பைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அத்தகைய அகதிகளாக ஆகியிருப்பதாக ஐ.நா உயர் ஆணையர் மதிப்பிட்டுள்ளார்.

    யுக்ரேனுக்கு நேர் கிழக்கே போலந்து அமைந்துள்ளது. போர் அகதிகளின் வருகைக்குத் தயாராக அதன் எல்லையில் வரவேற்பு மையங்களையும் அந்நாடு அமைத்துள்ளது.

  7. ரஷ்யா ஏன் நேட்டோவை நம்ப மறுக்கிறது?

    யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பதில் தரும் வகையில் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது.#

    அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் யுக்ரேனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன.

  8. யுக்ரேனில் ஈரோடு மாணவி: காப்பாற்றும்படி வாட்ஸ் ஆப் மூலம் வேண்டுகோள்

    யுக்ரேனில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாணவி தங்களை மீட்க வேண்டும் என வாட்ஸ் அப் மூலம் பேசி, பெற்றோருக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த நாகராஜ் - குணவதி தம்பதியரின் மகள் மவுனிசுகிதா (20). யுக்ரேனில் உள்ள லையு நேசனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

    ரஷ்யா - யுக்ரேன் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தங்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் தற்போது அங்குள்ள நிலை குறித்தும் மாணவி மவுனிசுகிதா, வாட்ஸ் அப் மூலம் பேசி, பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், “யுக்ரேனில் 15 ஆயிரம் மாணவர்கள்இருக்கிறோம். அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு போதுமான விமானங்களை அனுப்பவில்லை,” என்று கூறியுள்ளார்.

    யுக்ரேனில் இருக்கும் ஈரோடு மாணவி மவுனிசுகிதா

    பட மூலாதாரம், HANDOUT

    யுக்ரேனில் இருக்கும் நிலவரம் குறித்து தகவல் அனுப்பிய ஈரோடு மாணவி மவுனிசுகிதா, ”நாங்கள் இப்போது யுக்ரேனின் லீவ் (lviv) பகுதியில் உள்ளோம். இங்கு 50 தமிழர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களும் இருக்கிறோம். இங்கு ராணுவத்தினர் யாரும் இதுவரை வரவில்லை.

    ஏடிஎம்களில் காலையில் நீண்ட வரிசை இருந்தது. மாலையில் அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டுவிட்டன. உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒரு வாரத்திற்கு சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்

    மாணவி மவுனிசுகிதாவின் தந்தை நாகராஜ் கூறும்போது, “போர் நடக்கும் இடத்தில் தவிக்கும் எங்கள் மகளின் பதிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். எங்கள் மகளையும் அங்குள்ள இந்தியர்களையும் மீட்டுத் தர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிகாலையில் தொடங்கிய ஏவுகணை தாக்குதல்கள்: உறுதிப்படுத்திய யுக்ரேன் அதிபர்

    இன்று விடியலுக்கு முன்பாக பல ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

    அந்நாட்டு நேரப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தாக்குதல்கள் தொடங்கியதாக, ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

    ரஷ்யாவின் தாக்குதல்கள் ராணுவம் மற்றும் பொதுமக்கள் தங்கியுள்ள தளங்கள் இரண்டையும் குறிவைத்ததாக அவர் தெரிவித்தார். முன்னதாக, பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்படாது என ரஷ்யா தெரிவித்திருந்தது.

    ஆனால், இன்று காலையில் தலைநகர் கீவில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், குடியிருப்பு ஒன்றிலும் தாக்குதல் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தனது உரையில், யுக்ரேனுக்கு உதவ வேண்டும் எனவும், ரஷ்யாவின் கொடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும், மேற்கு நாடுகளை கேட்டுக்கொண்டார்.

    “எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். உலகின் மிகவும் சக்திவாய்ந்த படைகள், இதனை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன”, என ஸெலென்ஸ்கி தன் உரையில் தெரிவித்தார்.

  10. யுக்ரேன் தலைநகரைப் பிடிக்கப் போரிடும் ரஷ்ய படைகள்: இதுவரை நடந்தது என்ன?

    யுக்ரேனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா நடத்தி வருகிறது. இந்த நேரலை பக்கத்தில் நீங்கள் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி விவகாரத்தில் தற்போது வரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்:

    • யுக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளையும் மூன்றாவதாக தூரத்தில் பெரிய குண்டு வெடிப்பையும் கேட்டதாக, அந்நகரில் உள்ள சிஎன்என் குழு தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ஜெட் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக, யுக்ரேன் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    • நிதித்துறை, ஆற்றல், போக்குவரத்து மற்றும் ரஷ்ய உயர்மட்ட தலைவர்களுக்கான விசாக்கள் ஆகியவற்றை இந்த பொருளாதாரத் தடைகள் இலக்காகக் கொண்டிருக்கும் என, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அதிகாலை பிரஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தன் நாட்டு மக்களுடன் காணொலி வாயிலாக இன்று காலை மீண்டும் உரையாற்றினார். அப்போது, யுக்ரேனிய மற்றும் ரஷ்ய மொழிகளில், போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு ரஷ்யாவிடம் கேட்டுக்கொண்டார்.

    யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி விவகாரத்தில் உடனடி கள நிலவரத்தை அறிய எங்களுடன் தொடர்ந்து இந்த நேரலை பக்கத்தில் இணைந்திருங்கள்.

  11. வணக்கம் நேயர்களே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் உங்களுக்குத் தொகுத்து வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  12. யுக்ரேனில் இனி பாதுகாப்பான இடம் ஒன்று இல்லை: பிபிசி யுக்ரேன் சேவை ஆசிரியர்

    மார்த்தா ஷோக்காலோ

    பட மூலாதாரம், MARTA SHOKALO

    தாக்குதல் 30 நிமிடங்களுக்குத் தொடர்ந்தது.

    நான் எனது 10 வயது மகனுக்கு ஆடைகளை அணிவித்தேன். பிறகு ஜன்னலிலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரமாக அமர்ந்து காலை உணவு உட்கொண்டோம். ஆனால் அவன் மிகவும் பயத்தில் இருந்ததால் வாந்தி எடுத்துவிட்டான். ஒரு மெழுகுவத்தியும் கொஞ்சம் குடிநீரும் எடுத்துக்கொண்டு நாங்கள் நிலவறைக்குச் சென்றோம். நிலைமை மோசமானால் இதுதான் எங்கள் ஒரே தஞ்சம்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, போரை நிறுத்த ரஷ்யா எங்களுடன் பேச வேண்டும்: யுக்ரேன் அதிபர்

    வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    பட மூலாதாரம், UKRAINE PRESIDENT/FACEBOOK

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தன் நாட்டு மக்களுடன் காணொலி வாயிலாக இன்று காலை மீண்டும் உரையாற்றினார். அப்போது, யுக்ரேனிய மற்றும் ரஷ்ய மொழிகளில், போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு ரஷ்யாவிடம் கேட்டுக்கொண்டார்.

    “விரோதத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் இந்த படையெடுப்பை நிறுத்துவது பற்றி ரஷ்யா விரைவில் அல்லது பின்னர் எங்களுடன் பேச வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

    “எந்தளவுக்கு உரையாடல் விரைவில் தொடங்குகிறதோ, அந்தளவுக்கு ரஷ்யாவின் இழப்புகள் சிறியதாக இருக்கும்” என அவர் கூறினார்.

    தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை, “நம் நாட்டை காப்போம்” எனவும் அவர் தெரிவித்தார்.

    தலைநகரில் தீவிரமான தாக்குதல் குறித்து நேற்றிரவு அவர் எச்சரித்தார். தலைநகரை விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், தற்போது ரஷ்யாவின் முதல் இலக்கு தான் தான் என தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறினார்.

  14. யுக்ரேனில் தவிக்கும் விழுப்புரம் மாணவர்: "குண்டுவெடிப்பில் நிலம் அதிர்வதை உணர முடிகிறது"

    முத்தமிழ்

    பட மூலாதாரம், HANDOUT

    படக்குறிப்பு, முத்தமிழ்

    "வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 50 கிமீ தூரத்தில் குண்டு வெடித்தது. அதனால் தொடர்ந்து இப்பகுதியில் நிலம் அதிர்வதை எங்களால் உணர முடிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    தற்போது இப்பகுதியில் போக்குவரத்து சேவை இல்லை. மேலும் யுக்ரேன் உள்ளூர் மக்கள் கடைவீதிகளில் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இதனால் எங்களால் எளிதில் தேவையானவற்றை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் ஏடிஎம்-களில் அதிகாலையில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பணம் எடுக்கமுடியவில்லை," என்றார் முத்தமிழ்.

  15. ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்

    ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விரிவான புதிய தடைகளை அறிவித்துள்ளது.

    நிதித்துறை, ஆற்றல், போக்குவரத்து மற்றும் ரஷ்ய உயர்மட்ட தலைவர்களுக்கான விசாக்கள் ஆகியவற்றை இந்த பொருளாதாரத் தடைகள் இலக்காகக் கொண்டிருக்கும் என, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அதிகாலை பிரஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளார்.

    இந்த தடைகள் மூலம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை அல்லது விமானங்களுக்கான உதிரி பாகங்களை வாங்க முடியாது என அவர் தெரிவித்தார்.

    “நேற்றிரவு ஒப்புதல் பெறப்பட்ட இந்த பெரிய அளவிலான தடைகள் ஐரோப்பிய ஒன்றியம் எந்தளவுக்கு ஒற்றுமையுடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது” என அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. கீவில் ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – யுக்ரேன் அதிகாரி

    யுக்ரேன் தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ஜெட் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக, யுக்ரேன் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    யுக்ரேன் தலைநகர் கீவில் இன்று அதிகாலையில் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உறுதிபடுத்தப்படாத செய்தி வெளியாகியுள்ளது.

    இச்செய்தி தொடர்பாக தீ மற்றும் கரும்புகை வெளியேறும் புகைப்படம் ஒன்றை, என்டிஏ எனும், யுக்ரேனிய தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் தலைநகர் கீவில் குண்டு வெடிப்பு

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கீவில் நேற்று விழுந்த ஏவுகணையின் உதிரி பாகங்களை ஆராயும் காவல்துறை

    யுக்ரேன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

    இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளையும், மூன்றாவதாக தூரத்தில் பெரிய குண்டு வெடிப்பையும் கேட்டதாக, அந்நகரில் உள்ள சிஎன்என் குழு தெரிவித்துள்ளது.

    இரு குண்டு வெடிப்புகளை கேட்டதாக, உள்துறை முன்னாள் துணை அமைச்சர் ஆன்டன் ஹெராஷ்சென்கோகூறியுள்ளதாக, யுக்ரேனின் யூனியன் செய்தி முகமைதெரிவித்துள்ளது. மேலும், தாழ்வாகவும் குறைந்த வேகத்திலும் பறந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இது குறித்து யுக்ரேன் ராணுவம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

  18. யுக்ரேன் தலைநகரைப் பிடிக்க ரஷ்யப் படைகள் யுத்தம்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, இரவு கவிந்த நிலையில் யுக்ரேன் தலைநகர் கீவில் மக்கள் பலர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பாதாளத் தளங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் அருகே முழு மூச்சுடன் தாக்குதலை நடத்தி வருகிறது. யுக்ரேன் ராணுவமும் ரஷ்யப் படைகளை விரட்டியடிக்க கடுமையாக முயன்று வருகிறது.

  19. கோவை: அணியாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை வீழ்த்தி பேரூராட்சியை கைப்பற்றிய சுயேச்சைகள்

      • எழுதியவர், மோகன்
      • பதவி, பிபிசி தமிழுக்காக
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

    திமுக, அதிமுக என்கிற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி கோவை மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர்.

  20. யுக்ரேன் மீது இரண்டாவது நாளாக போர்: செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை கைப்பற்றிய ரஷ்யா

    செர்னோபிள் அணு உலை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, செர்னோபிள் அணு உலை: கோப்புப்படம்

    யுக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனை “முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதல்” என கூறியுள்ள யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் மிக்கைலோ பொடாலியாக், “இன்று ஐரோப்பாவில் நிகழும் தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்று” என தெரிவித்தார்.

    செர்னோபிள் அணு உலையில் 1986ம் ஆண்டு நிகழ்ந்த விபத்து, மனித வரலாற்றில் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோசமான அணு விபத்தாகும்.

    செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்தால், அத்தகைய பேரழிவு மீண்டும் நடக்கும் என, யுக்ரேன் அதிபர் எச்சரித்துள்ளார்.

    செர்னோபிள் அணு விபத்துத் தளத்தில், “மற்றுமொரு சூழலியல் பேரழிவு” நிகழ்வதன் சாத்தியம் குறித்து, யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளது.