வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய படையெடுப்பில் 57 பேர் பொதுமக்கள் உள்பட 194 யுக்ரேனியர்கள் பலி
விளாதிமிர் புதின் அறிவித்த ரஷ்ய படையெடுப்பு நேற்று தொடங்கியதில் இருந்து 450 ரஷ்ய வீரர்கள் மற்றும் 57 பொதுமக்கள் உள்ளிட்ட 194 யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஆயுதப் படைகள் துறை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இன்று ஐ.நா மனித உரிமை கவுன்சில் மேற்கோள் காட்டிய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 25 உயிரிழப்புகளை விட இது அதிகமான எண்ணிக்கையாகும்.
மேலும், பிரிட்டன் படைகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே நேட்டோ நட்பு நாடான எஸ்டோனியாவிற்கு அனுப்பப்படுவதாகவும் யுக்ரேனின் அண்டை நாடுகள், அந்நாட்டிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உதவுவதற்காக மொத்தம் 1,000 படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஹீப்பி கூறினார்.





