யுக்ரேனுக்கு எதிரான தாக்குதலுக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளதாக யுக்ரேன்
அதிபர் வோலோடிமிர்
ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்புக்கு
பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், “யுக்ரேனின் எல்லைகளில் கிட்டத்தட்ட 200,000 படைகள்
மற்றும் ஆயிரக்கணக்கான போர் வாகனங்களை,” ரஷ்யா குவித்துள்ளதாக
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகிறார்.
இரவு நேர தொலைக்காட்சி உரையில், “ரஷ்ய குடிமக்களை யுக்ரேனின் குடிமகன் என்று குறிப்பிடுவதற்காக,
“ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பேசத் தொடங்கினார்.
அதில், “நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். யுக்ரேனிய மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
யுக்ரேனிய அதிகாரிகள் அமைதியை விரும்புகிறார்கள்,” என்று அவர்
கூறினார்.
யுக்ரேன்
எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய வீரர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், மாஸ்கோவில் இருக்கும் தலைமை, “அவர்கள் முன்னேறுவதற்கு,”
ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியவர், “இந்த நடவடிக்கை
ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய போரின் தொடக்கமாக இருக்கலாம்,” என்றார்.