சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி விமர்சனம்

பட மூலாதாரம், GETTY IMAGES
ஹைதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலா கிராமத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையம் அருகே ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது.
'சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் பயன்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘புதிய இந்தியா’ சீனா நிர்பார் (சீன தயாரிப்பு) என மாறிவிட்டதோ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்மூலம், சுயசார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் குறித்து பேசிவரும் பிரதமர் நரேந்திர மோதியை ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு






