"இந்திய முஸ்லிம் பெண்களின் உரிமைகளை தடுக்காதீர்கள்" - மலாலா

கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான மலாலா யூசுஃப்சாய் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்காக தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. ஹுண்டாய் சர்ச்சை இடுகை விவகாரம்: கொரிய தூதரிடம் விளக்கம் கேட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    காஷ்மீர் சுதந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ஹுண்டாய் பாகிஸ்தான் வெளியிட்ட சமூக ஊடக இடுகை மற்றும் அதன் பின்பு அந்நிறுவனத்தின் இந்திய கிளை வெளியிட்ட விளக்கம் இந்தியாவில் பயனர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

    பலரும் அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் வேளையில், டெல்லியில் உள்ள கொரிய தூதரை அழைத்து ஹுண்டாய் நிறுவன செயல்பாடு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் கேட்டிருக்கிறது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹுண்டாய் பாகிஸ்தான் பகிர்ந்த சர்ச்சைக்குரிய பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய அரசாங்கம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பிரச்னை இந்தியாவின் ஒருமைப்பாடு சம்பந்தப்பட்டது, எனவே இதில் சமரசம் செய்ய முடியாது என்றும் அதில் கொரிய தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஹுண்டாய் தனது ட்வீட்டில், "பாகிஸ்தானால் வழங்கப்படும் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள்’ மற்றும் ‘காஷ்மீரில் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை நினைவுகூர' ஆதரவு தர வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தது.

  2. உத்தர பிரதேச தேர்தலில், பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சம் என்ன?- ஆக்ராவில் இருந்து பிபிசி தமிழ் நேரலை

  3. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா - ஆளுநரை விமர்சித்த கட்சிகள்

    MK stalin

    பட மூலாதாரம், TN DIPR

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வில், நீட் விலக்கு மசோதா தொடர்பான தீர்மானத்தின் மீது பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல், மாநில சுயாட்சி மீதான தாக்குதல்" என்று கூறினார். மு.க.ஸ்டாலின்

    இது தொடர்பாக அவர் பேரவையில் இன்று பேசியதன் முக்கிய அம்சங்கள்:

    நமது மாநில எம்.பிக்கள் எல்லாம் குடியரசு தலைவரை சந்திக்க முயன்றனர். உள்துறை அமைச்சரையும் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில்தான், 142 நாள்கள் கழித்து நீட் விலக்கு சட்ட முன்வடிவை திருப்பியனுப்பியுள்ளார் ஆளுநர்.

    சட்டமன்றத்துக்கு என உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை கேள்வியெழுப்பும் வகையில் ஆளுநரின் செயல் உள்ளது. இந்த அவையில் மீண்டும் முன்மொழிகிறேன். ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற ஒரே கண்ணோட்டம் உருவாகியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி, மீண்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என நம்புகிறேன்.

    நீட் விலக்கு மசோதா

    பட மூலாதாரம், TNDIPR

    மாநிலங்கள் அதிக அளவிலான அதிகாரங்களைப் பெறும் வகையிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் இலக்கை அடையவும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கலைஞரின் (கருணாநிதியின்) முழக்கத்தை வென்றெடுக்கவும் இந்த நாள் மிக முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  4. உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை- விஜய் மக்கள் இயக்கம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லாமல் தனித்து போட்டியிடுவதாக நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார் . அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி‌ வைக்கப்போவது இல்லை என்றும் தனித்து போட்டியிடுகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

  5. பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு

    பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியை இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    Sports Women
  6. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கொண்டு வந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது

    மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கோரி சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வந்த சூழலில், சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்துக்கு பிறகு ஒருமனதாக சட்ட மசோதா நிறைவேறியது. மேலும் பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா, மீண்டும் இன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்

    தமிழ்நாடு ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சிறப்புக்கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது நிறைவு அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

  7. "நீட் எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம்"- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

    பட மூலாதாரம், TN DIPR

    படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழ்நாடு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்கான சிறப்பு கூட்டத் தொடரில் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியபோது

    “கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. யாருமே கேட்காத சூழலில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

    அனைத்துவித படிப்புகளுக்கும், 2005-ல் நுழைவுத்தேர்வே வேண்டாம், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவ சேர்க்கையை நடத்த வேண்டும் என சட்டம் கொண்டு வந்தது அதிமுக” என பேசினார்.

    அப்போது குறுக்கிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இது அடிப்படை ஆதாரமற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2006-ல் தான் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவை அமைத்து, அந்த அறிக்கையை வைத்து, நீதிமன்றங்களுக்கு சென்று நுழைவுத்தேர்வு ரத்து என்ற வாய்ப்பைப் பெற்றுத்தந்தார். நீங்கள் அதனை நினைத்திருக்கலாம், ஆனால் செய்து முடித்தது கருணாநிதி” என கூறினார்.

    பின்னர் பேசிய விஜயபாஸ்கர், “19.06.2005-ல் உயர்கல்வித்துறை அமைச்சகத்தில் ஜி.ஓ.184-ல் அதிமுக அரசு நுழைவுத்தேர்வு சட்டம் கொண்டு வந்தார். அந்த சட்டத்தை எதிர்த்து மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது அந்த சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அதனை குடியரசுத் தலைவர் வரை சென்று ஒப்புதல் பெற்றனர். ஆதாரம் இல்லாமல் இந்த கருத்தை நான் சொல்லவில்லை” என தெரிவித்தார்.

    அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “1984-ல் நுழைவுத்தேர்வு இருந்ததை அவரே ஒப்புக்கொள்கிறார். அப்போது யாருடைய யாட்சி இருந்தது?” என கேள்வி எழுப்பினார்.

    இதன்பின் பேசிய விஜயபாஸ்கர், “ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பு என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அரசியல் காரணங்களால் அதிலிருந்து விலகுகிறது என பேசப்படுகிறது. ஆனால், அவ்வாறு அதிமுக தடம்புரளவில்லை, நீட் எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம். இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு அதிமுக தொடர்ந்து ஆதரவு தருவோம்” என்றார்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, , சிறப்பு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசி வருகிறார்

    "கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட கல்வி உரிமையை மீட்டெடுக்க என்று கூடியுள்ளதாகவும், தனக்கு பொது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இன்று அமைந்துள்ளது. நீட் என்ற சமூக அநீதியை இந்த சட்டம் முடிவுக்கு கொண்டு வரமுடியும். 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டப்பாதுகாப்பு,நுழைவுத்தேர்வு ஒழிப்புச் சட்டம், உள்ளீட்டு சட்டம் எல்லாம் இதே சட்டமன்றத்தில் தான் நிறைவேற்றப்பட்டது" என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் கருத்தை பேசி வருகிறார்.

    MK Stalin

    பட மூலாதாரம், TN DIPR

  9. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

    மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கோரி சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பியனுப்பிய கடிதத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, ''இந்தக் கூட்டத்தில் ஆளுநர் குறித்துப் பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையானது யூகங்களின் அடிப்படையில் உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். நீட் விலக்கு மசோதாவின் முக்கியத்துவத்தை அறிந்து கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி'' எனத் தெரிவித்தார்.இதன்பின்னர், கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், `` ஏழை மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு உள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடந்து வந்தது. ஆனால், நீட் தேர்வைக் கொண்டு வந்ததன் மூலம் அதற்கான பயிற்சிக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக கிராமப்புற ஏழை மாணவர்கள் சிரமமானதாக நீட் உள்ளது'' என்றார். ``அரசின் கொள்கை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு அரசுக்கே திருப்பியனுப்பியது சரியல்ல'' என மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.மேலும், ஆளுநரின் கடிதத்தில் வேலூர் சி.எம்.சி மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீட் தேர்வை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட மா.சுப்ரமணியன், ``மாநில அரசுக்கு சட்டம் இயற்றுவதற்கான அனுமதி உள்ளது. இது மத்திய அரசுக்கு எதிரானதாக இருந்தால்அரசியலமைப்புச் சட்டம் 754/2ன்படி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுக்கு உரிமை உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.மேலும், ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து ஆளுநர் முடிவு செய்வது என்பது அரசியல் சட்ட அமைப்பினை கேள்விக்குறியாக்கிவிடும்'' என்றார்.இதனையடுத்து, சட்டப்பேரவையில் பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ` தமிழ்நாடு அரசின் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் கருத்து தெரிவிக்கவில்லை' எனக் கூறவே, `வெளியே போக விரும்பினால் சென்றுவிடலாம்' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.இதையடுத்து, சட்டசபையில் இருந்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

  10. பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு

    iswoty

    பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியை இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹாய்ன், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் 2021ஆம் ஆண்டிற்கான ஐந்து போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

  11. சிறப்பு கூட்டத் தொடரில் அமைச்சர் உரை

    neet

    தமிழ்நாடு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்கான சிறப்பு கூட்டத் தொடரில் மாநில சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உரையாற்றி வருகிறார்.

    ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதால் அந்த ஆண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பதிலாக பயிற்சிக்குப் பின் பலமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் இடங்கள் கிடைக்கும் நிலை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிராக வே நீட் தேர்வு தமிழகத்தில் நடத்தப்பட்டு வருவதாக அவர் தமது உரையின் போது குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்ற இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநர் காணப்பட்டது என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

    அந்தச் சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி எதையும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

    142 நாட்களுக்கு பின் ஆளுநர் தன்னிச்சையாக மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார் அமைச்சர்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியுள்ளது.

    நீட் சமூக நீதிக்கு எதிரானது என்று அரசின் உயர்மட்டக் குழுவின் அறிக்கை மிகைப்படுத்திக் கூறியுள்ளது உள்ளிட்ட காரணங்களைக் கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்தார்.

  13. 11 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

    இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    பட மூலாதாரம், sri lanka navy

    sri lanka arrests indian fishermen

    பட மூலாதாரம், sri lanka navy

    யாழ்ப்பாணம் − நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    இந்த மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளையும், கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவிலிருந்து சுமார் ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள், கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த மீனவர்களை கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இவர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்படவில்லை.

  14. இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்

    சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் புகைப்படம்

    பட மூலாதாரம், tndipr

    படக்குறிப்பு, சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் புகைப்படம்

    நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடக்கிறது.

    இன்று காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் கூடுகிறது.

    மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கும் நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை மீண்டும் சபாநாயகரின் மறுபரிசீலனைக்கே அனுப்பியிருந்தார் மாநில ஆளுநர் ஆர்.என் ரவி.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிப்ரவரி 5ஆம் தேதி காலை நீட் விலக்கு தொடர்பான அனைத்து கூட்டம் நடைபெற்றது.

  15. பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

    பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

    இந்த ஆண்டு 'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதின்' மூன்றாவது பதிப்பை பிபிசி நடத்துகிறது. இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும்.

    இந்த விருது, இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கெளரவிப்பதாகும்.

  16. ரஷ்யாவுக்கு ஜோ பைடன் புதிய எச்சரிக்கை

    யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நார்டு ஸ்ட்ரீம் 2' என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டனில் ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்டஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன.

    ஆனால் அதை ரஷ்யா மறுக்கிறது. ராணுவ ஒத்துழைப்புக்கான மேற்குலக நாடுகளின் கூட்டணியான நேட்டோ அமைப்பில் யுக்ரேன் இணைவதை மேற்கு நாடுகள் தடை செய்ய வேண்டும் என்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ படைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் சமீப வாரங்களாக ரஷ்ய அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

    இதை நேட்டோ நாடுகள் நிராகரித்துள்ளன.

    ரஷ்ய படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள்
    படக்குறிப்பு, ரஷ்ய படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள்
  17. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.