தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 2ஆம் நாளாக 30 பேர் பலி - பாதிப்பு குறைகிறது

சென்னையில் அதிகபட்சமாக 1,475 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 9 பேர் கொரோனா உயிரிழப்பு என்று பதிவாகியிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளி நடப்பு

    நீட் விலக்கு - எம்.பிக்கள் வெளி நடப்பு

    பட மூலாதாரம், ANI

    தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்து விட்டார்.

    இதையடுத்து திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்ட்டு, அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் விவாதத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டபடி,திமுக எம்.பிக்கள் வெளி நடப்பு செய்தனர். தமிழ்நாடு எம்.பிக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் வெளி நடப்பு செய்தனர்.

    வெளி நடப்பு செய்த பின்னர் திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது, மாநில உரிமைகளுக்கு எதிரானது. கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆளுநரை எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சி எம்.பிக்கள் வெளி நடப்பு செய்துள்ளோம்.' என்றார்.

    மேலும், ''ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரின் பிரதிநிதி. ஆனால், மத்திய அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆளுநர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள்.'' என்றும் குற்றம்சாட்டினார்.

  2. யுக்ரேன் பதற்றம்: இந்தியாவுடனான உறவில் பாதிப்பில்லை - அமெரிக்க வெளியுறவுத்துறை

    இந்தியா - அமெரிக்கா உறவு

    பட மூலாதாரம், Narendra Modi

    யுக்ரேன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவும் பதற்றங்கள் அமெரிக்க-இந்தியா உறவுகளை பாதிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவும் பதற்றங்கள் அமெரிக்க-இந்தியா உறவுகளை பாதிக்கிறதா? என்ற கேள்விக்கு, "இல்லை. இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.

    இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு, நேரடிப் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவளிக்கிறோம். "பெய்ஜிங்கின் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் எங்கள் கவலைகளை தெரிவித்தோம். இந்தோ-பசிபிக் பகுதியில் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மதிப்புகளை மேம்படுத்த, நண்பர்கள் மற்றும் நண்பர்களுடன் நிற்கிறோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  3. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 1.49 லட்சமாக பதிவு - உயிரிழப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது

    இந்தியா முழுவதும் ஒரு நாள் கொரோனா பதிவு 1,49,394 ஆக பதிவாகியுள்ளது. முந்தைய தினத்தை விட 13 சதவீதம் குறைந்துள்ளது.

    இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 2,46 ,674 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 1,072 பேர் உயிரிழந்துள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 5 லட்சத்து 55 ஆகியுள்ளது. தற்போது நாடு முழுவதும் மொத்தம் 14, 35, 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா தொற்று விகிதம் 9.27 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு:

    தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 993 ஆக பதிவாகியுள்ளது என்று மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,87,322 ஆக உள்ளது. தற்போது 1,66,878 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. யுக்ரேன் பதற்றம்: போருக்கு பொய் குற்றச்சாட்டைக் கூறும் ரஷ்யா - அமெரிக்க வெளியுறவுத் துறை

    யுக்ரேன் பதற்றம்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய ஆதரவு கிளர்சியாளர்கள் அல்லது ரஷ்யா மீதான தாக்குதலுக்கு யுக்ரேன் ராணுவத்தை பொய்யாகக் குற்றம் சாட்டுவதன் மூலம், அந்நாட்டு மீது படையெடுப்பதற்கான காரணத்தை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

    யுக்ரேன் போர் பதற்றத்திற்கு உயிரிழப்புகளைக் காட்டும் சித்தரிக்கப்பட்ட தாக்குதல் படங்களைக் கொண்டு, ஒரு போலித் தாக்குதலை நடத்துவது மற்றும் படமாக்குவதை ரஷ்யா திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த ரஷ்யா, தவறான கொடிய நடவடிக்கைகளுக்கு திட்டமிடவில்லை என்று கூறியது.

    யுக்ரேன் அருகே ரஷ்யப் படைகள் குவிந்து வருவதைப் பற்றி அமெரிக்காவும் நேட்டோவும் கவலை கொண்டுள்ளன. படையெடுப்பதற்கான திட்டத்தை ரஷ்யா மறுக்கிறது, துருப்புக்கள் பயிற்சிக்காக இருப்பதாகக் கூறினர்.

    அவர்கள் தற்போது 100,000 பேர் உள்ளனர். யுக்ரேனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா இணைத்து, கிழக்கு டான்பாஸ் பகுதியில் கிளர்ச்சிக்கு ஆதரவளித்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பதற்றங்கள் வந்துள்ளன

  5. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண

    தொடர்ந்து இணைந்திருங்கள்