சி.என்.அண்ணாதுரை நினைவு நாள்: இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட நாடு குறித்து முழங்கியவர்

பட மூலாதாரம், ARUN SUBASUNDARAM
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுகவை உருவாக்கிய தலைவருமான சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அண்ணாதுரை பேசிய உரையை, அவரது நினைவு தினமான இன்று தொகுத்து வழங்குகிறோம்.
''நீங்கள் ஹிந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா?''
''இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக ஆகியுள்ள, ஒரு நாட்டில் இருந்து நான் வந்திருக்கிறேன் என கோருகிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு எதிரிகள் அல்ல.''
''உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசை வேறு, யதார்த்தம் வேறு.'' - சி.என்.அண்ணாதுரை
அவர் பேசிய கருத்துக்களை விரிவாக அறிய




