திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நாளன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த கூட்டமைப்பில் சேருமாறு, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்குக்கு மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் அனுப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடா, தெலுங்கு தேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர்கள் ஒடிசா நவீன் பட்நாயக், மேற்கு வங்கம் மமதா பானர்ஜி, மகராஷ்ட்ரா உத்தவ் தாக்கரே, டெல்லி அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஹேமந்த் சோரன், புதுச்சேரி என். ரங்கசாமி மற்றும் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் லோக் கான்கிரஸ் அமரீந்தர் சிங், சுக்பீர் சிங் பாதல், சிராக் பாஸ்வான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.