தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை
தமிழ்நாட்டில் நேற்று (ஜனவரி 27ஆம் தேதி) ஒரே நாளில் 28,515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 பேர் உயிரிழந்துள்ளனர். 27ஆம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 2,13,534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கம் போல சென்னை (5591), செங்கல்பட்டு (1696), கோயம்புத்தூர் (3629) ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஈரோடு (1314), சேலம் (1431) , திருப்பூர் (1877) என கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பெரம்பலூர் (63), சிவகங்கை (128), வேலூர் (153) போன்ற மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று குறைவாகவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.