மோதி உரையின்போது டெலிபிராம்டர் கோளாறு?
உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமை மாலை உரையாற்றியபோது திடீரென்று தன் பேச்சுக்கு இடையே இடர்பாட்டை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.
பிரதமர் மோதி தனது பக்கவாட்டாகப் பார்த்து கேள்வி எழுப்புவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவரது டெலிப்ராம்ப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.
எனினும் ஆல்ட் நியூஸின் முகமது ஜுபைர் தனது பதிவில், " இது டெலிபிராம்டர் பிரச்னையாகத் தோன்றவில்லை. இருபது நிமிட உரையில் அவர் பக்கவாட்டில் பார்க்கவில்லை. டெலிபிராம்டர் முன்னால் இருந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

