மும்பையில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடிச்சம்பவம்: மூன்று பேர் பலி

இந்த வெடிச்சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம். மணிகண்டன் and ஜோ மகேஸ்வரன்

  1. மோதி உரையின்போது டெலிபிராம்டர் கோளாறு?

    உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமை மாலை உரையாற்றியபோது திடீரென்று தன் பேச்சுக்கு இடையே இடர்பாட்டை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

    பிரதமர் மோதி தனது பக்கவாட்டாகப் பார்த்து கேள்வி எழுப்புவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவரது டெலிப்ராம்ப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.

    எனினும் ஆல்ட் நியூஸின் முகமது ஜுபைர் தனது பதிவில், " இது டெலிபிராம்டர் பிரச்னையாகத் தோன்றவில்லை. இருபது நிமிட உரையில் அவர் பக்கவாட்டில் பார்க்கவில்லை. டெலிபிராம்டர் முன்னால் இருந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. சுனாமி தாக்கிய டோங்காவில் என்ன நிலைமை?

    சுனாமி

    பட மூலாதாரம், Reuters

    எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பசிபிக் தீவான டோங்காவில் வசிக்கும் மக்களுக்கு என்னவாயிற்று என்பது இரண்டு நாள்களாகியும் வெளியுலகத்துக்குத் தெரியவில்லை.

    தொலைத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருப்பதால், நிலைமையை ஆராய விமானங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

    கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததால் தீவு முழுவதும் சாம்பல் மூடியிருப்பதாகவும், ஒரு மீட்டர் உயரத்துக்கும் அதிகமான சுனாமி அலைகளால் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.

    எரிமலை வெடித்த சத்தம் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அப்பால் இருக்கும் நியூசிலாந்து வரைக்கும் கேட்டிருக்கிறது.

    10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பெரு நாடு வரைக்கும் சுனாமி அலைகள் சென்றிருக்கின்றன.

  3. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம். மணிகண்டன், ஜோ. மகேஸ்வரன்