ஜனவரி 31 வரை பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் 31 ஆம் தேதி வரையில் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விக்னேஷ். அ and எம்.ஆர். ஷோபனா

  1. இன்றைய நேரலை நிறைவு பெற்றது

    நேயர்களுக்கு வணக்கம்,பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை சந்திப்போம். உலகம் மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இந்தியாவால் தேடப்பட்டு வந்த சலீம் காசி பாகிஸ்தானில் உயிரிழப்பு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    1993ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சலீம் காசி, சனிக்கிழமை பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி நகரத்தில் உயிரிழந்ததாக மும்பை காவல்துறை தரப்பில் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    சலீம் காசி தாவூத் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், சோட்டா ஷகீலுக்கு நெருக்கமானவர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. ஈலோன் மஸ்குக்கு அழைப்புவிடுத்த மேற்கு வங்க அமைச்சர் - கேலி செய்த பாஜக

    ஈலோன் மஸ்க்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஈலோன் மஸ்க்

    மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் மொஹம்மத் குலாம் ரப்பானி, தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்குமாறு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் ஈலோன் மஸ்குக்கு அழைப்புவிடுத்தார்.

    அதை கேலி செய்யும் விதத்தில், 14 ஆண்டுகளுக்கு முன், திரிணாமூல் காங்கிரஸ் தான் டாடாவின் கார் திட்டத்தை வெளியேற்றியது என குறிப்பிட்டனர்.

    கடந்த சில நாட்களாக, இந்தியாவில் ஆளும் மாநில அரசைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள், ஈலோன் மஸ்கை தங்கள் மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்குமாறு அழைப்புவிடுத்து வருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.

  4. சாமியார் யதி நரசிங்கானந்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உத்தராகண்ட் மாநிலத்தில், கடந்த மாதம் நடந்த இந்து சாமியார்களின் 'தர்ம சன்சத்' (மத நாடாளுமன்றம்) கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக, அதன் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சாமியார் யதி நரசிங்கானந்த் சனிக்கிழமை இரவு உத்தராகண்ட் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  5. பஞ்சாப் முதல்வரின் சகோதரருக்கு சீட்டு மறுப்பு - சுயேட்சையாக போட்டியிட முடிவு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    பஸ்ஸி பத்தனா தொகுதியில் நான் போட்டியாளராக இருந்தேன், ஆனால் காங்கிரஸ் கட்சி எனக்கு சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. நான் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளேன்.

    2007ஆம் ஆண்டு தேர்தலிலும் நான் இப்படித்தான் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றேன் என டாக்டர் மனோகர் சிங் பஸ்ஸி கூறியுள்ளார். இவர் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

  6. சென்னை டிரேட் சென்டரில் ஆக்சிஜன் வசதியோடு 950 படுக்கைகள் தயார்

    தா மோ அன்பரசன், தமிழக அமைச்சர்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, தா மோ அன்பரசன், தமிழக அமைச்சர்

    தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 950 படுக்கைகள், சென்னை டிரேட் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியுள்ளார்.

    இந்த மையத்தில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கிராமபுற தொழிற்சாலைகள் துறை குறிப்பிட்டுள்ளார்.

  7. சீட்டு கிடைக்கவில்லை என சமாஜ்வாதி தொண்டர் தற்கொலை முயற்சி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், தனக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கப்படவில்லை என, லக்னெள கட்சி அலுவலகத்தின் மூன் தற்கொலைக்கு முயன்றதாக ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    "நான் அலிகார் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். எனக்கு நியாயம் வேண்டும்" என சமாஜ்வாதி கட்சித் தொண்டர் தாகூர் ஆதித்யா கூறியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  8. இந்தியாவில் 156 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உலகின் மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் 156 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளோம் என ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா ஏன் என் ஐ முகமையிடம் கூறியுள்ளார்.

  9. ஜோகோவிச் பதிலாக தரப்பட்டியலில் 150ஆவது இடத்தில் உள்ள வீரருக்கு வாய்ப்பு

    நோவாக் ஜோகோவிச்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, நோவாக் ஜோகோவிச்

    நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்பட உள்ளார். எனவே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் திட்டமிட்டபடி அவரால் நாளை விளையாட முடியாது.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட, தகுதி பெற கடைசி சுற்று வரை போராடி தோற்ற, இத்தாலியைச் சேர்ந்த சல்வடொரே கருசோ தற்போது ஜோகோவிச் பதிலாக விளையாட உள்ளார். இதை போட்டி ஒருங்கிணைப்பாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

    இவர் ஆடவர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் 150ஆவது இடத்தில் உள்ளார். கடைசி நிமிடத்தில் ஆட்டத்தை திட்டமிடும் பிரச்சனைகளை போட்டியை நடத்துபவர்கள் எதிர்கொண்டுள்ளனர், ஆனால் உலகின் நம்பர் 1 வீரர் வெளியேறிய பின் ஆட்டத்தை திட்டமிடுவது இதுவரை நிகழாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

  10. தமிழ்நாட்டில் ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

    கொரோனா
    படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் 31 ஆம் தேதி வரையில் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31 ஆம் தேதி வரையில் 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதனையடுத்து வருகின்ற 19 ஆம் தேதியன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11. பணமோசடி: ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்த நல்லதம்பி கைது, ஆ. விஜயானந்த்

    ஆவினில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த வழக்கில் முதல் நபராகக் குற்றம் சுமத்தப்பட்ட விஜய நல்லதம்பியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அ.தி.மு.கவின் 2016-21 ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

    இந்தப் புகாரின்பேரில் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேநேரம், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரையில் ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக விஜய நல்லதம்பியும் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் அவருக்குப் பிணை மறுக்கப்படவே, தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, எட்டு தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடிவந்தனர். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதியன்று கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் தனிப்படை போலீஸாரால் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், ` உள்நோக்கத்தில் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி செய்யப்பட்டார். பண மோசடி வழக்கில் ஏ2 ஆக ராஜேந்திர பாலாஜி சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் ஏ1 ஆக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நல்லதம்பியை போலீஸார் இதுவரையில் கைது செய்யவில்லை' எனப் பேட்டியளித்தனர்.

    மேலும், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நான்கு வாரகால இடைக்கால ஜாமீன், ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது மோசடிப் புகார் அளித்த விஜய நல்லதம்பியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு

    கொரோனா தடுப்பூசி போடாததால் விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்.

    அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான அவர் விளையாட முடியாது.

  13. லஞ்சம் பெற்ற வழக்கில், கெயில் நிறுவன அதிகாரி கைது

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில், கெயில் நிறுவனத்தின் இயக்குநர் (மார்க்கெட்டிங்) இ.எஸ் ரங்கநாதன் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளது என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை தனியார் நிறுவனங்கள் வாங்க, அதற்கு சாதகமாக செயல்பட 50 லட்சத்துக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  14. பன்றியின் இதயத்தை பெற்ற நபரின் சர்ச்சைக்குரிய கடந்த காலம்

    சமீபத்தில், உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பெற்றார். அவர் ஒரு நபரை ஏழு முறை கத்தியால் குத்தித் தாக்கிய குற்றவாளி என்று, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    57 வயதான டேவிட் பென்னட், 1988ஆம் ஆண்டு, எட்வர்ட் ஷூமேக்கர் என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளி என்று ஷூமேக்கரின் சகோதரி ரேடியோ 4-இன் டுடே ஷோ என்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

  15. இந்தியாவில் இதுவரை 7,743 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் குணமடைந்துள்ளனர் என்றும்; 314 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உறுதி செய்யப்பட்ட ஒமிக்ரான் திரிபு பாதிப்புகள் 7 ஆயிரத்து 743 ஆக உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. நோவாக் ஜோகோவிச் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று

    டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசாவை அந்நாட்டு அரசு இரண்டாவது முறையாக ரத்து செய்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இன்று மதியத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    இரண்டாம் முறையாக விசா ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததால் அவருடைய விசா முதலில் ரத்து செய்யப்பட்டது.

    பின்னர் நீதிமன்றத்தில் மூலம் அவர் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார். எனினும் இரண்டாவது முறையாகவும் அவரது விசா ரத்து செய்யப்பட்டது.

    தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதற்கு ஆஸ்திரேலிய அரசு காரணம் கூறியது. நீதிமன்றம் தங்க அனுமதித்தால் திங்களன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் விளையாடுவார்.

    Novak Djokovic

    பட மூலாதாரம், Getty Images

  17. தமிழகம் முழுவதும் இன்று ஊரடங்கு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக, தமிழகத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக, சென்னையில் இன்று பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அப்பகுதிகளின் படங்களை ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  18. அமெரிக்கா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

    தெற்கு பசிஃபிக் பகுதியில் உண்டான எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி அலைகள் ஏற்படலாம் என அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன.

    இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பசிஃபிக் பெருங்கடலின் கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் உடனே அங்கிருந்து காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டோங்கா, ஃபிஜி தீவுகளை அண்மித்துள்ள கடல் பகுதிகளில், கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு உண்டானதன் காரணமாக அப்பகுதிகளில் கடும் புகை மூட்டம் உண்டாகியுள்ளது.

    ஃபிஜி அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கடலோரப் பகுதிகளில் நிவாரண முகாம்களைத் திறந்துள்ளது.

    டோங்காவில் பெரும்பாலான பகுதிகளில் எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது.

    எரிமலை வெடிப்பால் உண்டான சேதத்தின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    volcano tsunami

    பட மூலாதாரம், EPA

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ்.அ, எம்.ஆர். ஷோபனா.