வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு: டெல்லி எல்லையில் விவசாயிகள் மகிழ்ச்சி
இந்தியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று இன்று காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட அறிவிப்புக்கு டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் அறிவிப்பை அவர்கள் சக விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
இதேவேளை, பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு நிறைவேற்றி முடிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதார விலை விவகாரம் மட்டுமின்றி வேறு சில பிர்சனைகளும் உள்ளன. அவை தொடர்பாக மத்திய அரசு விவசாயிகள் தரப்புடன் பேச வேண்டும் என்று அவர் கூறினார்.