‘கொரோனா அறிவுரைகளை கடைப்பிடிக்காவிட்டால்…….’
கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட மருத்துவ ரீதியிலான அறிவுரைகளை கடைப்பிடித்தால், மற்றும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என வெளியிடப்பட்டதை சரியாக பின்பற்றினால் இந்தியா கொரோனா எண்ணிக்கையில் உச்சத்தை எட்டாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இனி செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
அவ்வாறு கடைப்பிடிக்காவிட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3390 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்துளளார்.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 1273 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் 16,540 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், 37, 916 பேர் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 29.36 ஆக உள்ளது.
இதுவரை இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.
கொரோனா சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5200 ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை தயார் செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.