"இந்தியாவில் ஜுன், ஜுலையில் கொரோனா உச்சகட்டத்தை அடையலாம்"
இந்தியாவில் தற்போது வெளியாகும் தரவுகள் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் விகிதத்தை வைத்து பார்த்தால், ஜுன், ஜுலை மாதங்களில் இத்தொற்று உச்சகட்டத்தை அடையும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஆனால் இதில் ஏதேனும் மாற்றமும் இருக்கலாம். சில காலம் பொறுத்துதான், இதன் தாக்கம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார் என ஏஎன்ஐ செய்தி முகமை கூறுகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால், 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,783 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு












