வணக்கம். நான் அபர்ணா ராமமூர்த்தி. தற்போதுதான் நீங்கள் இந்த நேரலையில் இணைகிறீர்கள் என்றால், கடந்த சில மணி நேரங்களில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறேன்.
பொது மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை இந்திய அரசு கட்டயமாக்கி உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட செயலி இது. நீங்கள் ஒருவருடன் தொடர்பில் இருந்து, அந்த நபருக்கு சில நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தால், அதனை ஆரோக்கிய சேது செயலி உங்களுக்கு தெரியப்படுத்தும்.
இந்தியாவில் இதுவரை 37,336 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,223 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அட்டவணையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. வரும் செவ்வாய் கிழமையில் இருந்து பாரம்பரிய சீன மருந்துவ பணியாள்ரகள் செய்லபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முடி திருத்தக் கடைகள், போன்றவை மே 12ஆம் தேதியில் இருந்து செயல்படும்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று 102 வயதான யப் லே ஹாங் என்ற பெண்மணி கொரோனா தொற்றில் இருந்து அங்கு மீண்டு வந்துள்ளார். சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் 17,500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டாலும், 16 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது.
தாய்லாந்தில் புதிதாக ஆறு பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. கொரோனாவால் அங்கு இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர்.