ஒரே பாதுகாப்பு உடையை மீண்டும் அணிய வற்புறுத்தப்படும் கென்ய சுகாதார பணியாளர்கள்
கென்யாவில் உள்ள பெரும்பாலான சுகாதார பணியாளர்கள், ஒரே பாதுகாப்பு உடையை மீண்டும் அணிய வற்புறுத்தப்படுவதாக கென்யாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட பெரும்பாலான சுகாதார பணியாளர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை அரசு சரிவர அளிப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டில் 17.8 % விழுக்காட்டினருக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.