தாயை காண 480கிமீ சைக்கிள் பயணம் - மகனை கண்டதும் உயிரைவிட்ட தாய்
புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் உடல்நிலை பாதித்த தாயைக்காண 480 கிமீ தூரம் சைக்கிள் மூலம் தனது மனைவியுடன் பயணித்துள்ளார் கூலித்தொழிலாளி ஒருவர். ஆனால் மகனை பார்த்த சில நிமிடங்களில் அந்த தாயார் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு போராடிய தாய்
ஆந்திர மாநிலத்தால் சூழப்பட்டுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் வசித்து வரும் 27 வயது ரேவுஸ்ரீதனு என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தங்கி கூலித்தொழில் செய்து வருகிறார். இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயார் மகாலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதாக உறவினர்கள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் தனது தாயைக் காண்பதற்கு ரேவுஸ்ரீதனு அவரது மனைவியுடன்தனித்தனி சைக்கிள் மூலம் ஐதராபாத்தில் இருந்து யானம் செல்ல தொடங்கினர். ஊரடங்குகாரணமாகபல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உதவியால் 480 கிமீ பயணம் செய்து, 4 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி யானம் பகுதிக்கு வந்து சேர்ந்தார். பிறகு அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்ட பிறகு தாயைப் பார்க்க அனுமதித்தனர். ஆனால், மகனை பார்த்த சில நிமிடங்களில் அவரது தாயார் மகாலட்சுமி உயிரிழந்துள்ளார்.
மகனின் கண்ணீர்
இதுகுறித்து மகன் ரேவுஸ்ரீதனு கூறியதாவது, "எனதுதாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்தது,நானும் எனது மனைவியும் சைக்கிள் மூலமாக யானம் வந்து சேர்ந்தோம். வெளி மாநிலத்திலிருந்து வந்த காரணத்தினால் எங்களை மருத்துவபரிசோதனை செய்து, இரவு நேரம் முழுவதும் தனிமைப்படுத்தினர். பிறகு மறுநாள் காலையில் எனது தாயைப் பார்க்க அனுமதித்தனர். எனது தாயைச் சந்தித்த சிறிது நேரத்தில்அவர் உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து,தாயாருக்கு இறுதி காரியங்கள் செய்ய அனுமதித்தபிறகு, எங்களை தற்போது தனிமைப்படுத்தியுள்ளனர். முடியாத காலத்தில் தாயாருடன் இருக்க முடியாமல் போனது மிகுந்த வேதனையளிப்பதாக," கண்ணீர் மல்க தெரிவித்தார்.