நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது.
- ஊரடங்கைப் பொறுத்தவரை மே மூன்றாம் தேதிவரை தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
- ரயில், விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியது.
- ஏற்கனவே ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்து வரும் சீனா, தற்போது அந்நாட்டில் உள்ள சீன பெருஞ்சுவர் உள்ளிட்ட 73 முக்கிய சுற்றுலா தளங்களை மீண்டும் திறந்துள்ளது.
- கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு ஊரடங்கைப் படிப்படியாக தளர்த்துவது குறித்து அந்நாட்டு அரசுகள் ஆலோசித்து வருகின்றன.