மசூதிகளில் தொழுகை - கட்டுப்பாடுகளை மீற பாகிஸ்தான் மதக்குருக்கள் முடிவு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மசூதிகளில் தொழுகை நடத்துவது தொடர்பாக அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி தொழுகை நடத்தப்போவதாக அந்நாட்டின் சில முக்கிய மதகுருக்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை உட்பட முக்கிய தொழுகை நிகழ்வுகளை புறக்கணிக்க இயலாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு கூறியபடி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிபாடு நிகழ்வுகள் நடக்கும் என்று அவர்கள் கூறினர்.
5 பேருக்கு மேல் தொழுகை நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூடாது என்று அந்நாட்டின் அரசு விதித்த கட்டுப்பாட்டுக்கு நாட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 5800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images








