கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் தென்கொரியாவில், பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே வாக்குச்சீட்டு அளிக்கப்படுகிறது. அந்த நாட்டில் சுமார் 44 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.
தென்கொரியாவில் எந்த காலத்திலும், எந்த காரணத்திற்காகவும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட்தில்லை. 1952-ஆம் ஆண்டு கொரிய போர் நடைபெற்ற நாட்களில் கூட அந்நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவை போலவே கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் தைவானில், நேற்று புதிய கொரோனா தொற்றுகள் ஏதும் பதிவாகவில்லை.
23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில், இதுவரை 393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்புடையவர்களை உடனடியாக பரிசோதித்ததே தைவானின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.