நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
இத்தாலியில் புதன்கிழமையன்று கொரோனா தொற்றால் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,645ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் அமெரிக்காவிற்கு பிறகு இத்தாலியில்தான் கொரோனா தொற்றுக்கு அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொத்து கொத்தாக குவியும் சடலங்கள்... அடக்கம் செய்ய இடமில்லாமல் தவிக்கும் உலக நாடுகள்.
ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு முடிந்து மீண்டும் ரயில்கள் இயங்கும் என்ற தவறான செய்தியை தெரிவித்து, பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் கூட காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் குல்கர்னி என்ற அந்த செய்தியாளர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என மும்பை காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் த்ரிமுகே தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? உலக வங்கியின் கணிப்பு
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது.
இந்த எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டிய இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே தற்போது இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஆனால், உண்மையான தரவுகள் இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
24 மணி நேரத்தில் பிரிட்டன் மருத்துவமனைகளில் புதிதாக 761 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
அங்கு இதுவரை 12,868 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் முறையாக எப்படி கைக்கழுவ வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை விளக்குகிறது இந்த காணொளி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.
சுமார் 1,30,000 பேர் இத்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அங்கு இதுவரை 26,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன் மத்திய சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரசால் முதல் ஒன்றரை மாதத்தில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
ஏப்ரல் 2ஆம் தேதி கொரோனா தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது. தற்போது அது இரட்டிப்பாகி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

கைகளை கழுவ போதுமான தண்ணீர் இல்லாததால் அரபு பிராந்தியத்தில் சுமார் 7.4 கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
மேலும் அங்கு 8.4 கோடி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதிகூட வீடுகளில் இல்லை என்பதால் அவர்கள் பொதுவான நீர் ஆதாரத்தில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனாலும் இந்த பெருந்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP
தமிழநாட்டில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று கோவிட்-19 தொற்றால் இருவர் இறந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் இறந்தவரக்ளின் எண்ணிக்கை 14 ஆகியுள்ளது.
பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
பிரேசிலின் பீரங்கிப்படையில் இருந்து ஆப்பிரக்காவில் போரிட்ட எர்மான்தோ பிவெட்டா, இத்தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது பலரும் இசைக்கருவிகள் இசைத்து, கைத்தட்டி ஆரவாரம் எழுப்பினர்.

பட மூலாதாரம், EPA
அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 195.78ஆக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200-ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் ஜனவரி 7 அன்று கொரோனா தொற்று கண்டறியப்படவுடன், ஜனவரி 8ஆம் தேதியே இந்தியா நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மிக விரைவிலேயே நடவடிக்கை எடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், ஜனவரி 8ஆம் தேதி வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி, ஜனவரி 17 அன்று சுகாதார ஆலோசனைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட் 19 தொற்றை கையாள்வதில் இந்தியாவிற்கு அடுத்த 2 - 3 வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்கள், எந்த கொரோனா தொற்று பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
"பிகாரின் நிலை மோசமாக இல்லை. ஆனால், மகாராஷ்டிராவின் நிலை தற்போது மோசமாகவே இருக்கிறது. குறிப்பாக மும்பை. கர்நாடகா மாநிலமும் அப்படித்தான். ஆனால், அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள் இதனை எதிர்கொள்ளும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்" என அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "பெருந்தொற்றின் இக்கட்டான சூழலில் அமெரிக்காவின் முடிவு கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது" என தெரிவித்தார்.
அதேபோல அதிபர் டிரம்பின் முடிவிற்கு ஜெர்மனியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"இந்த நேரத்தில் மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது உதவாது" என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹைக்கோ மாஸ் கூறினார்.
மேலும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்துவதன் மூலமாகவே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
"300 குடும்பங்களுக்கு வெறும் 5 கழிப்பறைகள்தான் உள்ளன. காலையில் இதனை பயன்படுத்த அவ்வளவு கூட்டம் இருக்கும். இந்த சூழலில் எப்படி கொரோனாவிலிருந்து நாங்கள் தப்பிப்பது?" - மும்பை தாராவி தமிழர்களின் அவல நிலை
கொரோனா வைரஸ் தொற்று வெளவாள்களிடம் இருந்து, எறும்புண்ணிகளுக்கு பரவி, அந்த விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை விஞ்ஞானி கங்ககேத்கர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்களும் இதுகுறித்து கண்காணித்தோம். இரண்டு வகையான வெளவாள்கள் இருக்கின்றன. அவற்றுக்கு கொரோனா தொற்றை மனிதர்களுக்கு பரப்பும் ஆற்றல் இல்லை. இது மிகவும் அரிதானது. 1000 ஆண்டுகளில் ஒருமுறை வெளவாள்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பிருக்கலாம்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images