சந்திரயான் 2 விண்கலம் சேகரித்த தரவுகள் அக்டோபரில் வெளியீடு - இஸ்ரோ

பிரசுரிக்கப்பட்டது

இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் செவ்வாய் அன்று முதல் ஆண்டை நிறைவு செய்தது.

இதனிடையே சந்திரயான்-2 விண்கலம் சேகரித்த தரவுகள் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஏனுவல் லூனார் ப்ளானட்டரி சயின்ஸ் கான்ஃபரன்ஸ் என்ற அறிவியல் மாநாட்டில் இஸ்ரோ வெளியிட இருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

ஜூலை 22 2019 ஆம் ஆண்டு 'பாகுபலி' என்று அழைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஒன்றின் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

பாகுபலி என்பது இந்த விண்கலத்தின் அலுவல்பூர்வமான பெயர் கிடையாது. ஜிஎஸ்எல்வி MK-III M-1 என்பது அந்த ராக்கெட்டின் பெயர்.

ஆகஸ்டு 20 2019 அன்று நிலவின் சுற்றுவட்ட பாதையை சந்திரயான்-2 விண்கலம் சென்றடைந்தது.

இந்த விண்கலத்தில் 8 பாகங்களும் தற்போது சரியாக நன்றாக வேலை செய்வதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :