You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈரோடு கொடுமணலில் தொல்லியல் ஆய்வுகள் துவங்கின
ஈரோடு மாவட்டம் கொடுமணலில் தொல்லியல் ஆய்வுகள் இன்று காலையில் துவங்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதி. 1985லிருந்தே மத்தியத் தொல்லியல் துறை, மாநில அரசின் தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை கொடு மணலில் அகழாய்வுகளைச் செய்திருக்கின்றன. அந்த அகழ்வுகளில் பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்ககாலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
கல்மணிகள், இரும்பு உருக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இங்கு இருந்ததும் கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
அதற்குப் பிறகு, இது தொடர்பான ஆய்வுகள் தொடராத நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்திருந்தது.
சில மாதங்களுக்கு முன்பே இங்கு அகழாய்வு துவங்கவிருந்த நிலையில், கொரோனா காரணமாக மாநிலம் முழுவதும் அகழாய்வுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த வாரம் மீண்டும் அகழாய்வுப் பணிகளைத் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து கீழடி, ஆதிச்ச நல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வுகள் துவங்கப்பட்டன. இப்போது கொடுமணலிலும் ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- 43 சிறுபாலங்கள், 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள், 1 சிறு அணை- ஆப்ரிக்காவில் அசத்தும் மதுரைக்காரர்
- இந்தியப் பெருங்கடல், 16 நாடுகள் - 12,000 கிமீ தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்
- நீங்கள் வளர்க்கும் பூனை உங்களை நேசிக்கிறதா? என்ன செய்தால் பூனைக்கு பிடிக்கும்?
- இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: