போக்குவரத்து விதிகளை மீறியவருக்கு ரூ. 23,000 அபராதம் விதித்த போலீஸார்

ஹரியானா

பட மூலாதாரம், Hindustan Times

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஹரியானா மாநிலம் குருகிராமில் மாநில போக்குவரத்து போலீஸார் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, வாகன ஓட்டி ஒருவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது.

இச்சூழலில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்று திங்கள்கிழமை காலை சுமார் ஒரு மணியளவில் ஓட்டுநர் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல் பயணித்த தினேஷ் மதான் என்பவருக்கு மாநில போக்குவரத்துப் போலீசார் 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு 5,000 ரூபாயும், வண்டியின் பதிவு சான்றிதழ் இல்லாததற்கு 5,000 ரூபாயும், மூன்றாம் நபர் பைக் காப்பீடு எடுக்காததற்கு 2,000 ரூபாயும், காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியதற்காக 10,000 ரூபாயும், ஹெல்மட் இல்லாமல் பயணித்ததற்கு 1,000 ரூபாயும் என மொத்தம் 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தான் ஹெல்மட் அணியவில்லை என்றும், தன்னிடம் வாகனப் பதிவுச் சான்றிதழ் இல்லை என்றும் இதனால், போக்குவரத்து போலீஸார் 23,000 அபராதம் விதித்து வாகனத்தை கைப்பற்றிவிட்டதாகவும் தினேஷ் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :