‘வானிலும் பறப்பேன், கடலிலும் நீந்துவேன்’ – கலக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர் - காணொளி

‘வானிலும் பறப்பேன், கடலிலும் நீந்துவேன்’ – கலக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

சென்னையைச் சேர்ந்த 35 வயதான சதீஷ்குமார் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரால் நடக்க முடியாது.

ஆனால் அது அவரை முடக்கிவிடவில்லை. பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தனது ஆர்வத்தை செயல்படுத்தி வருகிறார்.

ஸ்கூபா டைவிங், பாராஷூட்டில் பறப்பது, ராம்ப் வாக், கிரேனில் தொங்கியபடி நடனமாடுவது என்று பல விஷயங்களிலும் ஈடுபட்டு வாழ்க்கை தரும் அத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார்.

மேலும், மாறுத்திறனாளிகளால் பயன்படுத்தக்கூடிய வகையில் பொது போக்குவரத்துச் சேவைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தாம் முயன்று வருவதாகவும் தெரிவிக்கிறார்.

இந்தக் காணொளியில் அவரது பயணத்தைப் பற்றி அவரே சொல்கிறார்.

தயாரிப்பு: ஹேமா ராகேஷ், பிபிசி தமிழுக்காக

ஒளிப்பதிவு: ஜெரின் சாமுவேல், பிபிசி தமிழ்

படத்தொகுப்பு: நிஷாந்த், பிபிசி தமிழுக்காக

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: