இலங்கையில் திட்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டும் 10 படங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆகவும் காணாமல் போனோர் எண்ணிக்கை 191 ஆகவும் அதிகரித்துள்ளது. 2,17,263 குடும்பங்களை சேர்ந்த 7,74,724 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உயிரிழப்புகளுள் 52 பேர் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக, இலங்கை முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிப்படுத்தும் படங்கள் சில...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு