கொழும்பு மயானத்தில் நின்ற காருக்குள் சித்ரவதை செய்யப்பட்ட தொழிலதிபர் பலி - என்ன நடந்தது?

கொழும்பு மயானத்தில் நின்ற காருக்குள் சித்ரவதை செய்யப்பட்ட தொழிலதிபர் பலி - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கொழும்பு - பொரள்ளை மயானத்தில் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், முன்னணி வர்த்தகருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - பிளவர் வீதியைச் சேர்ந்த 51 வயதான முன்னணி வர்த்தகரே தினேஷ் சாஃப்டர்.

உயிரிழந்த நபர், தனது காருக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: