You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காங்கிரஸ் வங்கிக்கணக்கு முடக்கம்: பாஜக பற்றி ராகுல் காந்தி கூறியது என்ன?
பாஜக தனது வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தேர்தலில் சம பலத்துடன் போட்டியிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸுக்கு எதிராக வேண்டுமென்றே சதி நடக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“வெறுப்பு நிறைந்த ஒரு ‘அசுர சக்தி' ஜனநாயகத்தைக் கொல்ல, காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது. தனது பொருத்தமற்ற அரசியல் செயல்பாடுகளை மறைக்க நிதி நெருக்கடிகளை காங்கிரஸ் காரணம் காட்டுவதாக பாஜக கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)