BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
மிசா சட்டத்தில் கைதானபோது ஸ்டாலின் தாக்கப்பட்டாரா? வரலாற்று ஆவணங்கள் கூறுவது என்ன?
மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் ஸ்டாலினுக்கு நேர்ந்தது என்னவென்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை இந்தக் கட்டுரை அலசுகிறது.
'மெக்கா ஒப்பந்தத்தில்' இரான் இணைய வேண்டும் என ரஷ்யா விரும்புவது ஏன்? அது சாத்தியமா?
எதிர்காலத்தில் இரானும் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இணையக்கூடும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருப்பது, இந்தப் புதிய பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் வரம்பு மற்றும் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
'குரலில் தனித்தன்மை, மாயாஜாலம்'; சின்மயி என்றதும் பலரது நினைவுக்கு வரும் 10 பாடல்கள்
தனியார் தொலைக்காட்சியில் நடந்த பாடல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாடகர் ஸ்ரீனிவாஸ் அவரைத் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தினார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'கன்னத்தில் முத்தமிட்டால் ' பாடல் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் சின்மயி.
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றம்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய 4 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நால்வரையும் 16ஆம் தேதிவரை சிறையில் அடைக்க வேண்டும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு அனுப்பாததால் இருளர் பெண் சிசுவுடன் மரணமா? புகாரில் உள்ளது என்ன?
காஞ்சிபுரத்தில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் மரணம் தொடர்பாக தனியார் ஆலை உரிமையாளர் மீது வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 10) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் புகார் மனுவில் கூறியது என்ன?
'ரகசியமாக தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் உணவு, உன்னிப்பாக கண்காணிக்கும் மெய்க்காப்பாளர்கள்'; புதினின் பாதுகாப்பு வளையத்துக்குள் யாரும் நுழைய முடியாதா?
அதிபர் புதினின் பாதுகாப்பு எப்போதும் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது.
மேற்கு வங்கம்: துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பது தொடர்பாக தீரேந்திர சாஸ்திரியின் பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின் போது அசைவ உணவு உண்பதற்கு எதிராகப் பாகேஸ்வர் பாபா தீரேந்திர சாஸ்திரி பேசிய பேச்சுக்கு வங்காளிகளிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, அவருக்கு எதிராகக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாய நில பயன்பாட்டு மாற்றத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் - எதிர்ப்பும் ஆதரவும் என்ன?
தமிழ்நாட்டில் விவசாய நில பயன்பாட்டு மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதன் சாதக பாதகங்களை இந்தக் கட்டுரை அலசுகிறது.
காணொளி, காணொளி: மிசா விவகாரத்தில் விஜயின் உடல்மொழிக்கு ஸ்டாலின் பதில், கால அளவு 1,42
யார் தம்மை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்றவே முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட்ட ஆப்பிள் - 20 ஆண்டுகளில் செய்த பெரிய மாற்றம் கைகொடுக்குமா?
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஔரங்கசீப்பிடம் தோற்று 1.5 லட்சம் ரூபாய் அபராதம் கட்டிய ஜோசையா சைல்ட் - கிழக்கிந்திய கம்பெனி சாம்ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைத்தது எப்படி?
ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது தற்செயலாக நடந்தது என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜான் சீலியின் கருத்திற்கு மாறாக, அது திட்டமிடப்பட்டது என்றும் அதை முன்னெடுத்தவர் யார், அவரது பின்னணி குறித்தும் இந்தக் கட்டுரை பேசுகிறது.
சௌதி தாக்குதலை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தானும் துருக்கியும் ஏன் மெக்கா ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை?
கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான சரியான சூழலோ அல்லது பொதுவான எதிரியோ இல்லாததால், மெக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளான பாகிஸ்தானும் துருக்கியும் செளதி அரேபியா மீதான ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்கள் ராணுவத்தை உடனடியாகப் பயன்படுத்தாமல் அமைதி காக்கின்றன.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































