தமிழ்நாட்டில் நகர்ப்புற
உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அனைத்து கட்சிகளும் கோரிக்கை
விடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான
பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான
ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. .
இந்நிலையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கூட்டம் மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., திரிணமூல் காங்கிரஸ் கட்சி
ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், ''தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்,'' என்று அதிமுகவின் பொள்ளாசி ஜெயராமன், திமுகவின் கிரிராஜன் மற்றும்
காங்கிரஸ், பா.ஜ.க நிர்வாகிகள் தனித்தனியாக தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு
திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 21 அல்லது 22ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தற்போது கொரோனா பரவல்
தீவிரமாக இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என ஓய்வுபெற்ற
மருத்துவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாய்மொழியாகக் கோரினார். இது
தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அது குறித்து முடிவெடுக்கப்படுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.