வந்துகொண்டிருக்கும் செய்தி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பாஜகவின் சி.டி ரவி, அண்ணாமலை

பட மூலாதாரம், ㅤ
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியே அவரவர் வீடுகளுக்குச் சென்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவியும், மாநில தலைவர் அண்ணாமலையும் சந்தித்துள்ளனர்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் சந்தித்தனர்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்மூவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளின் ஆதரவு எம்பிக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக பாஜக மேலிடம் சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோரை கேட்டுக் கொண்டதாகவும் அது தொடர்பாக பேசுவதற்காக இருவரும் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


