நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
- கட்சி எம்எல்ஏக்கள் விரும்பினால் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
- ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- 'குமுதம்' இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பால் காலமானார்.
- மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பார்வையாளர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
- அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிகார் விதான் சௌதாவிலிருந்து பாட்னாவில் உள்ள ராஜ் பவனுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.
- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்டு, பெண்கள் போராட்டம்.
- மதுரை வணிகவரித்துறையினரால் 1 கோடி மதிப்பிலான, சுமார் 1 டன் கஞ்சாவை வாகன தணிக்கையின் போது மினி வேனுடன் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.