தமிழ்நாடு பிளஸ் டூ பொதுத்தேர்வில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 9.12 லட்சம் பேரில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் டூ தேர்வில் 97.95 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
86.69 சதவீத தேர்ச்சியுடன் குறைந்த தேச்சி பெற்ற மாவட்டமாக வேலூர் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் ராமநாதபுர மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த தேர்வில் 591க்கும் மேல் மதிப்பெண் ற்றவர்கள் 656 பேர். 581 முதல் 590 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 3,826 பேர்.
மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.32% ஆகவும், மாணவர்கள் சதவீதம் 90.96 ஆகவும் உள்ளது.
துணைத் தேர்வு எப்போது?
பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் தெர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.
ஜூன் 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும். 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.