யுக்ரேனில் 38 இடங்களில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்

யுக்ரேன் நாட்டின் ராணுவ கிடங்கு, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட தாக்குதல் இலக்குகள் 38ல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இந்திய 'பிரதமர் மோதியின் தவறான நிர்வாகம்' - ராகுல் காந்தி

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

    ''மின்நெருக்கடி.

    வேலைக்கு நெருக்கடி

    விவசாயிகளுக்கு நெருக்கடி

    பணவீக்க நெருக்கடி'' என்று பதிவிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, ''ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை, அழிப்பது எப்படி என்பதற்கு, ஒரு ஆய்வாக பிரதமர் மோதியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகம் உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. மருத்துவ மாணவர்களின் சமஸ்கிருத உறுதிமொழி 'கண்டனத்திற்குரியது' - ப.சிதம்பரம்

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதி மொழி சர்ச்சையில் கல்லூரி முதல்வருக்கு தெரியாமல் நடந்திருந்தால், அவரை பொறுப்பாக்கக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து, அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது'' என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, ''டீன் டாக்டர் ரத்தினவேலு கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவ மனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார், என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம்.

    அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை.'' என்றும் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

  4. தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது - உச்ச நீதிமன்றம்

    தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்திருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

    தற்போதுள்ள தடுப்பூசி கொள்கை நியாயமற்றது, தன்னிச்சையானது என்று சொல்ல முடியாது என்பது திருப்தியாக உள்ளது என்றும் பொதுமக்களின் நலனுக்காக அரசு கொள்கை வகுக்கலாம், நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    மேலும், பொது இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செல்ல கட்டுப்பாடு உள்ளிட்ட நிபந்தனைகளை சில மாநில அரசுகள் விதித்துள்ளது சரியல்ல என்றும் அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம் நான் ஜோ மகேஸ்வரன்.

    இதுவரை ஆ.லட்சுமிகாந்த் பாரதி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  6. "இரண்டு மாதங்களாக சூரிய வெளிச்சத்தைப் பார்க்கவில்லை"

    ரஷ்யா - யுக்ரேன்

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் ரஷ்யப்படையினரால் முற்றுகையிடப்பட்ட அஸவ்ஸ்டால் இரும்பு ஆலையிலிருந்து பல வாரங்களுக்குப் பின்னர் டஜன் கணக்கிலான குடிமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இரு மாதங்களாக தான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கவில்லை எனவும், தான் உயிர்பிழைக்க மாட்டேன் என எண்ணியதாகவும், அங்கிருந்து வெளியேறிய பெண் ஒருவர் தெரிவித்தார்.

    ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு டஜன் கணக்கான பொதுமக்கள் வந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் யுக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள ஸாப்போரீஷியாவுக்கு வந்துகொண்டிருப்பதாக, யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

    "100 பேர் அடங்கிய முதலாவது குழுவினர் யுக்ரேன் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றனர்" என அவர் ட்வீட் செய்துள்ளார்.

    "அவர்களை திங்கள்கிழமை (இன்று) ஸாப்போரீஸியாவில் சந்திப்போம். எங்கள் குழுவினருக்கு பாராட்டுகள்! அந்த ஆலையில் உள்ள மற்றவர்களையும் வெளியேற்ற ஐநாவுடன் இணைந்து அக்குழு பணியாற்றிவருகிறது" என அவர் தெரிவித்தார்.

  7. இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க இந்திய பிரதமர் தயாராக உள்ளார் - அண்ணாமலை

    "சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப் போல, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தயாராக இருக்கிறார்" - இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

    அண்ணாமலை
  8. சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை - மதுரை மருத்துவ மாணவர்கள் சங்கம்

    சமஸ்கிருதம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை எனவும், ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி ஏற்றோம் எனவும், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

    மதுரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக விளக்கமளித்த மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தினர், "முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் நாங்கள் உறுதிமொழி எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆனால், நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை எடுக்கவில்லை. சமஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பைதான் படித்தோம்.

    தேசிய மருத்துவ ஆணையம் இந்த உறுதிமொழியை பரிந்துரைத்திருக்கிறது, ஆனால் கட்டாயம் என சொல்லவில்லை" என தெரிவித்தனர்.

  9. மூளைசாவு அடைந்த இளைஞரின் இதயத்தை சென்னைக்கு 84 நிமிடத்தில் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

    மூளைசாவு - இதயம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் இதயத்தை, வேலூரில் இருந்து 84 நிமிடத்தில் சென்னையில் உள்ளவருக்கு மாற்ற ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருவதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  10. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை

    இலங்கை பொருளாதார நெருக்கடி

    இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் வந்து இறங்கி உள்ளனர்.

    இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் போலீசார் மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியில் இருந்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

  11. சிஎஸ்கே அதிரடி வெற்றி: ஜடேஜா தலைமை குறித்து தோனி கூறியது என்ன?

  12. வெப்ப அலைகள்: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? – எப்படி தற்காத்துக் கொள்வது?

      • எழுதியவர், க. சுபகுணம்
      • பதவி, பிபிசி தமிழ்
    வெப்ப அலைகள்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    அதீத வெப்பநிலை, இந்தக் கோடைக்காலத்தில் பொதுமக்களிடையே என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், அவற்றிலிருந்து எப்படி மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, மருத்துவர் சிவராம கண்ணனிடம் பேசினோம்.

    அவர், "வெயில் நம் மீது படாமல் பார்த்துக் கொள்வதே முதன்மையான பாதுகாப்பு நடவடிக்கை. வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே அதிகமாகச் செல்லாமல் இருக்க வேண்டும். அப்படியே செல்வதாக இருந்தாலும், காரில் செல்வது, குடை எடுத்துச் செல்வது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தோல் வெளியே தெரியாதவாறு முகம் உட்பட அனைத்தையும் துணியால் மறைத்துக் கொள்வது போன்ற உரிய பாதுகாப்புகளைச் செய்துகொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

  13. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 3,157 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 3,157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,500 ஆக இருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. வணக்கம் நேயர்களே!

    நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.