"தவறு செய்து விட்டேன், ஆனால் பதவி விலக மாட்டேன்" - கோட்டாபய ராஜபக்ஷ

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இந்தியாவில் கொரோனா தொற்று ஒரே நாளில் 90 சதவீதம் அதிகரிப்பு

    இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மொத்தம் 2, 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்தம் 1, 985 பேர் சிகிச்சை முடிந்து, நலம் பெற்றனர். ஒரு நாளில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்த, 11,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கு முந்தைய நாளின் கொரோனா தொற்று எண்ணிக்கையான 1,150 என்ற எண்ணிக்கையோடு ஒப்பிட இது சுமார் 90 சதவீதம் அதிகம். நேற்றை கொரோனா மரண எண்ணிக்கையான 214ல் முந்தைய நாள்களில் நடந்து அப்போது கணக்கிடப்படாத 62 மரண எண்ணிக்கையும் சேர்ந்துள்ளது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும், ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரிப்பு என்பது அதிகம்தான்.

    கொரோனா பரவல்

    பட மூலாதாரம், Getty Images

  2. லக்கிம்பூர்கேரி வன்முறை: மத்திய அமைச்சர் மகனின் பிணை ரத்து - உச்சநீதிமன்றம் உத்தரவு

    லக்கம்பூர் வன்முறை

    பட மூலாதாரம், PRASHANT/BBC

    லக்கிம்பூர் வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஒரு வார காலத்திற்குள் அவர் சரண்டர் ஆகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதலமைச்சர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் ஏற்றியதாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 8 பேர் உயிரிழந்தனர்.

  3. இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 367, டீசல் ரூ. 327

    இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது.

    இதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட் ரோல், டீசல் விலை உயர்வும் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இலங்கை ஐஓசி அறிவித்துள்ள புதிய விலைப் பட்டியலின்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 35, டீசல் ரூ. 75ம் என விலை உயர்ந்துள்ளது.

    இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் (92 ஒக்டோன்) ரூ. 338, 95 ஒக்டோன் ரூ. 367, யூரோ ரூ. 347க்கும் விற்பனையாகிறது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 289, சூப்பர் டீசல் ரூ. 327க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  4. இன்றைய நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்

    வணக்கம் இன்றைய நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.