புதுச்சேரியில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திமிங்கிலம், நடராஜன் சுந்தர்
புதுச்சேரி மீனவர் வலையில் சுமார் 2.5 டன் எடையுள்ள ராட்சத திமிங்கிலம் சிக்கியது.
புதுச்சேரி வீராம்பட்டிணத்தை சேர்ந்த மீனவர் சரவணன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், மீனவர்களுடன் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர். சுமார் 20 நாட்டிக்கல் தூரத்தில், அவர்களது வலையில் பெரிய அளவிலான மீன் சிக்கியது. தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு இழுத்து வந்தனர்.
சுமார் 50 மீனவர்கள் இணைந்து கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இறந்த நிலையில் 20 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் சிக்கி இருப்பது தெரியவந்தது. இரண்டரை டன் எடை கொண்ட, இந்த திமிங்கலம் காம ராசி இனத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
கால்நடை மருத்துவர்கள் மூலமாக திமிங்கலத்தை அங்கேயே உடற்கூறாய்வு செய்து, துறைமுகத்தில் புதைத்தனர்.