சென்னை தனியார் பள்ளி ஆசிரியரை காவலில் எடுக்க முடிவு
சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் குழு அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
அவரை ஜூன் 8ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, செங்கல்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, அந்த ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை சென்னை நகருக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் அதை மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் வெளியிட முன்வருமாறு நகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களின் அடையாளம் ரகிசயமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.