தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஓரிரு வாரங்களாக தினசரி உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. திறக்கப்பட்ட மதுக்கடைகள் - வரிசையில் காத்திருந்த மக்கள்

    இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு (மே 17 வரை) நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில நகரங்களில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

    மும்பையில் ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் காணப்பட்ட மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், வரிசையில் நின்று மக்கள் மது பானங்களை வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல், டெல்லியில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதாக டெல்லி கிழக்கு மண்டலத்தின் போலீஸ் இணை ஆணையரான அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் அசாமிலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, மதுக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. தளர்த்தப்பட்ட முடக்கநிலை: ஐரோப்பாவில் அண்மைய நிலை என்ன?

    ஐரோப்பாவில் சில நாடுகளில் இன்று முதல் முடக்கநிலை தளர்த்தப்படுவதை அடுத்து, அந்நாடுகளின் அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் தங்களின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன.

    இத்தாலியில் 8 வாரங்களுக்கு அமலில் இருந்த முடக்கநிலைக்கு அடுத்து, தற்போது சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி மக்கள் தங்கள் உறவினர்களை காண செல்லமுடியும். பூங்காக்கள் திறந்திருக்கும். உணவு விடுதிகள் மற்றும் பார்களுக்கு சென்று மக்கள் தங்கள் ஆர்ட்டரை வாங்கி செல்லலாம்.

    இதேபோல் ஸ்பெயினில் சிகை அலங்கார நிபுணர்கள் உள்ளிட்ட சிறு கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனியில் வனவிலங்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சிகை அலங்கார கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  3. மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளால் பலருக்கு மன அழுத்தம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் பெண்களின் உடல்நலம் பெரிதாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவர் உமையாள் முருகேசனிடம் பேசினோம். பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியாவுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    வெளிப்புற நடவடிக்கைகள் குறைந்துவிட்டதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. திடீரென உடல் எடை அதிகரிப்பது, மன அழுத்தம் ஆகியவை மாதவிடாய் சுழய்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சமீபத்தில் இம்மாதிரியான அழைப்புகள் அதிகம் வருகிறது. அதில் பலருக்கு பெரும்பாலும் பிசிஓடி பிரச்சனைகள் கூட கிடையாது.

    என்ன மாதிரியான உணவு வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சமயத்தில் இளம் வயதினர் நொறுக்கு தீனிகளை அதிகம் உட்கொள்கின்றனர் எனவே அதை தவிர்த்து சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    தற்போதைய நிலையில், வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் திட்டமிடாத கர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

    ஆரோக்கியமான உணவை உட்கொண்டு தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து நேர்மையாக சிந்தித்து வந்தால் வெற்றிகரமாக இந்த கொரோனா தொற்றிலிருந்து வெளிவரலாம்.

  4. சீனா மீது தொடரும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு

    ஷி ஜின்பிங்

    பட மூலாதாரம், AFP

    ”சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை மறைத்துவிட்டதாக” அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர் என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கசிந்துவிட்ட அறிக்கை ஒன்று கூறுவதாக ஏபி செய்தி முகமை தெரிவிக்கிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ஏற்கனவே சீனா மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

    இந்த தொற்றின் தீவிரத்தை மறைத்து மருத்துவப் பொருட்களின் இறக்குமதிகளை சீனா அதிகப்படுத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

    மேலும் ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனத்திடமும் சீனா சரியான தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  5. மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

    இந்திய தலைநகர் டெல்லியில் நீண்ட வரிசையில் மதுவாங்க காத்து கொண்டிருக்கின்றனர்.

    டெல்லி மட்டுமல்லாமல், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருப்புகள் நடைபெற்று வருகின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. சீனாவில் மே தின கொண்டாட்டம்

    சீனாவில் மே தினத்தையொட்டி ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு மக்கள் பயணங்களை மேற்கொண்டனர். இதன்மூலம் அங்கு இயல்புநிலை மிக விரைவாக திரும்பிக் கொண்டு வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

    விடுமுறையின் முதல் மூன்று நாளில் 85 மில்லியன் உள்நாட்டு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை தெரிவிப்பதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    தலைநகர் பீய்ஜிங்கில் மட்டும் 1.67 மில்லியன் மக்கள் 1,030 பூங்காக்களுக்கு சென்றுள்ளனர்.

    china

    பட மூலாதாரம், Getty Images

    china

    பட மூலாதாரம், Getty Images

  7. சொத்தை விற்று மக்களுக்கு உதவும் பாட்ஷா சகோதரர்கள்

    கர்நாடகாவை சேர்ந்த இரு சகோதரர்கள் முஜமில் பாட்ஷா மற்றும் தஜமுல் பாட்ஷா, கொரோனா காரணமாக பிறபிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பசியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக 25 லட்சம் மதிப்பிலான தங்கள் சொத்தை விற்பனை செய்திருக்கிறார்கள்.

    பிபிசியிடம் பேசிய இருவரில் இளைய சகோதரரான 37 வயதான முஜமில் பாட்ஷா, "நாங்களும் ஒரு காலத்தில் ஏழைகள்தான். அப்போது யாரும் எங்களை பாகுபாடுடன் நடத்தவில்லை. ஏராளமான உதவி செய்தார்கள். அதனால் முன்னேறினோம். இப்போது பலர் பசியால் வாடுவதை பார்த்தோம். அதனால்தான் இந்த முடிவை எடுத்தோம்." என்கிறார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. இயல்பு நிலையை நோக்கி இத்தாலி

    இத்தாலி

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட முதல் நாடு இத்தாலி.

    ஊரடங்கு விதிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு, தற்போது சில நடவடிக்கைகளுக்கு அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தங்கள் பகுதிகளுக்குள் நடைபெறும் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. உறவினர்களை பார்க்க செல்லலாம். உணவகங்களில் பார்சல் கிடைக்கும். பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

    40 லட்சம் மக்கள் தங்கள் பணிகளுக்கு திரும்பி செல்கின்றனர்.

    ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாடு இத்தாலியாகும்.

  9. கோவையில் ட்ரோன் மூலம் மருத்துவர்களுக்கு மலர் தூவப்பட்டதாக பரவிவரும் தகவல் உண்மையா?

    கோவை மருத்துவ ஊழியர்கள்

    பட மூலாதாரம், FACEBOOK

    கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

    இதற்காக, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நேற்று காலை தகவல்கள் வந்தன.

    கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளம் அல்லது கேரளாவின் திருவனந்தபுரம் விமானப்படை தளத்திலிருந்து கோவை சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அதேபோல், கோவையிலும் மலர் தூவப்படும் என்ற எதிர்பார்ப்பில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் நேற்று மாலை 5 மணி முதல் காத்திருந்தனர்.

  10. 'கோயம்பேடு வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா சோதனை'

    koyambedu

    பட மூலாதாரம், Getty Images

    கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகசென்னை மாநகர கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ''புதிதாக பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கோயம்பேடு சந்தை வணிகர்கள் அனைவருக்கும் சோதனை செய்யவுள்ளோம். சோதனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இன்றும் எண்ணிக்கை அதிமாக வாய்ப்புள்ளது. அச்சப்படத்தேவையில்லை,'' என்றார்.

    பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ''சென்னை நகரத்தில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தியுள்ளோம். நம்மிடம் தேவையான மருத்துவ வசதிகளுக்கு எந்த குறைவும் இல்லை. நோய் தொற்று பரவலை குறைக்க பொது மக்களின் நடமாட்டத்தை குறைக்கவேண்டும். இதில் பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை. அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்.'' என்றார்.

    தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு என்று கூறிய அவர், தமிழகத்தில் சோதனைகளின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்து வீடு திரும்புவார்கள் எண்ணிக்கையும் அதிகம் என்றார்.

  11. பஞ்சத்தின் பிடியில் சிக்கும் ஐந்து நாடுகள்

    "பசி காரணமாக உலகம் முழுவதும் அடுத்த பெருந்தொற்று பரவல் போன்ற நிலை உருவாகலாம்" என எச்சரிக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு.

  12. வெளிமாநில தொழிலாளர்களின் பயண செலவை ஏற்பதாக காங்கிரஸ் அறிவிப்பு

  13. மதுவாங்க அலைமோதிய கூட்டம்

    சத்திஸ்கரில் இன்று மாநிலத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து,சமூக இடைவெளியை கடைபிடித்தல் என்பதை மறந்து கூட்டம் அலைமோதியது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 3,85,436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் 4,07,895 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 4 கோடியே 01 இலட்சத்து 92 ஆயிரத்து 619 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

  15. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இன்று அமல்: என்னென்ன இயங்கும், எது இயங்காது?

  16. ’முக கவசம் உயிர்களை காக்கும்’

    பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள உலக புகழ்பெற்ற கிறித்து தி ரெடிமர் சிலை இவ்வாறாக ஒளியூட்டப்பட்டுள்ளது.

    சிலையின் மேல் “முக கவசம் உயிர்களை காப்பாற்றும்” என எழுத்தப்பட்டுள்ளது.

    பிரேசில்

    பட மூலாதாரம், Getty Images

  17. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

    சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மண்டலம் வாரியாக

    சென்னை
  18. இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பேசிய ஹாலிவுட் நடிகர்

    I For India

    பட மூலாதாரம், I For India/Facebook

    ஷாருக் கான் உட்பட 70க்கும் மேற்பட்ட பாலிவுட் நடிகர்கள், தங்கள் வீடுகளிலிருந்தே நான்கு மணிநேரம் கச்சேரி ஒன்றை சேர்ந்து நடத்தினர்.

    ’ஐ ஃபார் கான்செர்ட்’ எனப்படும் இந்த நிகழ்வு முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    பாடுவதற்கு முன்பு தனது குரல் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என நகைச்சுவை செய்த ஷாருக் கான், ”என்னால் முடியும், நான் செய்வேன், நான் நிச்சயம் உதவி செய்வேன்.” என்று தனது ரசிகர்களிடம் தெரிவித்தார் ஷாருக் கான்.

    ஐம்பது லட்சம் பேர் பார்த்த இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், மாதுரி தீக்‌ஷித், ரித்திக் ரோஷன் மற்றும் பிரியங்கா சோப்ரா அனைவரும் கலந்து கொண்டு தனதுரசிகர்களுக்கு, ”நாம் இந்த நெருக்கடியை சேர்ந்து கடப்போம்.” என தெரிவித்தனர்.

    இந்த நிகழ்வால் சேகரிக்கப்பட்ட தொகை கோவிட் 19 மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.

    நிக் ஜோனஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற யூ டியூபர் லில்லி சிங் ஆகியோரும் உட்பட இந்த நிகழ்வில், சர்வதேச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வின் இறுதியில், இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பாடிய ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ”இம்மாதிரியான மக்களுக்கு உதவும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

  19. உலகளாவிய எண்ணிக்கை

    corona

    பட மூலாதாரம், Getty Images

    இன்றைய நிலவரப்படி உலகமுழுவதும் 35 லட்சத்து 5 ஆயிரத்து 761 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அடங்கும். எனவே தற்போது உலகமுழுவதும் கிட்டதட்ட 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சில நாடுகளின் கொரோனா வைரஸ் குறித்தான தகவல்கள்

    அமெரிக்கா - மொத்த பாதிப்புகள் - 1,157,945; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 939,758; உயிரிழப்புகள் - 67,680

    ஸ்பெயின் - மொத்த பாதிப்புகள் - 217,466; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 73,300; உயிரிழப்புகள் - 25,264

    இத்தாலி - மொத்த பாதிப்புகள் - 210,717; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 100,179; உயிரிழப்புகள் - 28,884

    பிரிட்டன் - மொத்த பாதிப்புகள் - 187,842; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 158,421; உயிரிழப்புகள் - 28,520

    பிரான்ஸ் - மொத்த பாதிப்புகள் - 168,925; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 93,140; உயிரிழப்புகள் - 24,900

    ஜெர்மனி - மொத்த பாதிப்புகள் - 165,664; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 28,198; உயிரிழப்புகள் - 6,866

    ரஷ்யா - மொத்த பாதிப்புகள் - 134,687; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 116,768; உயிரிழப்புகள் - 1,280

    துருக்கி - மொத்த பாதிப்புகள் - 126,045; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 59,497; உயிரிழப்புகள் - 3,397

    பிரேசில் - மொத்த பாதிப்புகள் - 101,147; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 51,131; உயிரிழப்புகள் - 7,025

    இது ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள்

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    இந்தியாவில் 29 ஆயிரத்து 453 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11,706 பேர் இந்த நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்; மேலும், இதுவரை 1373 பேர் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.