இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- யுக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது. உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹைலாண்ட் பார்க் எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஜுலை 19ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
- சிகாகோ துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடம் டீசல், பெட்ரோலை பெற்றுக் கொண்டு திருப்பிய அனுப்பியுள்ளனர்.
- வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.















